திருப்பூர்., ஜனவரி.07., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் 06.01.2020 அன்று மாலை 4.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட காங்கேயம் சிடிசி ரவுண்டானத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது CAA, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் மேலும் வீரியமடையும் என்று கூறினார், மேலும், அவர் பேசும் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா எவ்வளவு போராட்டம் நடந்தாலும் சட்டத்தை அமுல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம் என்று கூறுகிறார், நாங்களும் கூறுகிறோம் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை எங்களுடைய போராட்டத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து கட்சி & இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பெரும் திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் இந்திய தேசமக்களை கூறுபோடும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை குப்பையில் வீசுவோம்...!! தேசத்தை காத்திட சனாதன பாசிசம்
Month:
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கம்பத்தில் CAA மற்றும் NRCக்கு எதிரானகூட்டமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம், ஷமீம் அகமது கண்டன உரையாற்றினார்!
ஜன.07., தேனி மாவட்டம் கம்பத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இரண்டாம் கட்டமாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் MBM. பதுரூதின், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அகமது, அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் ஜமாஅத்துல் உலமா சபை மாநில துணைத்தலைவர் அலாவுதீன் மிஸ்பஹி ஹஜ்ரத், தமுமுக ஹாஜா கனி, இந்திய யூனியன் யூத் லீக் மாநில தலைவர் யூனுஸ் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் ராஜா உசேன், மனிதநேய மக்கள் முன்னேற்றக்கழகம் பாளை ரபிக், ஆகியோர் பங்கேற்றனர். மஜக சார்பில் தேனிமாவட்ட செயலாளர் ரியாஸ்,மாவட்ட பொருளாளர் சேக், மாநில செயற்குழு உறுப்பினர் கரீம்,மாவட்ட துணைச்செயலாளர் கம்பம் கலில், கம்பம் ஒன்றிய செயலாளர் ரபீக், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அபுப்க்கர் சித்திக், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அசரப்ஒலி மற்றும் மாவட்ட,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தேனி_மாவட்டம் 05.01.2020
கல்பாக்கத்தில்CAA NRC NPRக்குஎதிராக கண்டனபேரணி மற்றும் பொதுக்கூட்டம்..! தைமிய்யா கண்டன உரை..!
செங்கை.06.., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC-க்கு எதிராக கல்பாக்கத்தில் அனைத்து இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கண்டன பேரணி & பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா M.SC அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆதி அரசன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மஜக மாவட்டச் செயலாளர் கல்பாக்கம் ரஷீத, ஜமாத் தலைவர்கள் நயினா முகம்மது, பக்கீர் முகம்மது உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #செங்கல்பட்டு 05-01-2020
மம்தா பானர்ஜி கூறியதுபோல் ஐநாவில் முறையிட தயங்க மாட்டோம்..! மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
கடலூர்.ஜனவரி.5.., இன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட கண்டன மாநாடு நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார். இன்று டெல்லியில் JNU பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டித்தார். நாடெங்கிலும் நடைபெறும் போராட்டங்கள், நாள் தோறும் வீரியம் பெறுவதாக கூறியவர், அரசப் படைகளாலும், அடக்கு முறைகளாலும் இவற்றை ஒடுக்க முடியாது என்றார். மக்கள் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்றவர், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஐ.நா.வின் மேற்பார்வையில் இது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியதை நினைவு கூர்ந்தார். நீதி மறுக்கப்பட்டால் இப்பிரச்சனையை எங்கள் இந்து சமுதாய அறிவுஜீவிகள் ஐ.நா.வின் கவனத்துக்கு எடுத்து செல்வார்கள் என்றும் எச்சரித்தார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பிரம்மாண்ட மக்கள் திரள் கூடி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்குடி, சிதம்பரம் தொகுதி மக்கள் மட்டுமே இணைந்து இவ்வளவு பெரிய எழுச்சியை திரட்டி உள்ளனர். ஜனநாயக சக்திகள், முற்போக்கு கட்சிகள்,
கருப்புசட்டங்களுக்கு எதிராக பெரும்பாக்கம் ஜமாத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.., மஜக பங்கேற்பு..!
செங்கை.ஜனவரி.04.., CAA, NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக அனைத்து கட்சி, இயக்கங்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றினைந்து இந்தியா முழுவதிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஜமாத் சார்பாக OMR சாலையில் நேற்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் தாம்பரம் ஜாகிர், தில்ஷாத், அப்துல்லாஹ் உட்பட மஜக தொண்டர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பெருந்திரளாக பங்கேற்று ஆர்ப்பரித்தனர். தகவல்;- #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #செங்கை_வடக்கு 04-01-2020 https://m.facebook.com/story.php?story_fbid=2197293233703773&id=700424783390633