டிச,21 ஈரோடு மேற்குமாவட்டம் அனைத்து கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ் தலைமை தாங்கினார் சுன்னத் ஜமாத் தலைவர் டாக்டர் சாகுல்அமீத், ஜமாத் உறுப்பினர்கள் முன்னிலையில் வகித்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் SA சையது அஹமத் பாரூக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ராமன், மகபூப்பாஷா, கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், VPG குணசேகர், CPM பழனிச்சாமி, இந்திய. யூனியன் முஸ்லிம் லீக் ஹாத்திம்தாய், தமிழ்புலிகள் கட்சி செம்பன், ஜமாத்துல் உலமா செயலாளர் ஹஜ்ரத் கெளவுஸ் ரஷாதி, ஹஜ்ரத் ஜியாவூதீன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடுமேற்குமாவட்டம் 20.12.19
Month:
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம்: முதமிமுன் அன்சாரி MLA கொந்தளிப்பு..!
டிச.20, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC ஆகியவற்றுக்கு எதிராக கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட கண்டன மாநாடு திருப்பூரில் நடைப்பெற்றது. இதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நாடெங்கிலும் சாதி, மத பேதமின்றி, மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவது நாட்டின் அரசியல் சாசன சட்டத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்காகத் தான் என்றார். இந்த சட்டங்களை தமிழ் நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்றும் மீறி அமல்படுத்தினால், எந்த அதிகாரிகளையும் வீதிகளுக்குள் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றவர். இதற்காக சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்துவோம் என கொந்தளித்தார். இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த மே.வங்கம், கேரளா, புதுச்சேரி, ஒரிஸா, பீஹார் மாநில அரசுகளை பாராட்டவும் தவறவில்லை. மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் எங்கும் 'ட்ராபிக் ஜாம் 'ஆக இருந்தது. பல்வேறு சமூக மக்களும் திரண்டெழுந்து இச்சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது தமிழர் ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் ஹைதர், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் நாகூர் ஹமீது ஜெகபர், மாவட்ட துணைச் செயலர்கள் ராயல் பாஷா, முஜிபுர் ரஹ்மான், பாபு
தஞ்சை வல்லத்தில் மஜக மாநிலப் பொருளாளர் SSஹாரூன்ரசீது பங்கேற்று குத்பாபிரசங்கம்!
டிச.20, தஞ்சை வல்லத்தில் புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின் ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து கட்சியினர் பங்குப் பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூண்ரசீது கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ம.தி.மு.க வளைகுடா அமைப்பாளர் வல்லம் பஷீர் மற்றும் அமல ஸ்டாலின், தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அஹமது கபீர், MKP பக்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ், தி.மு.க நகரச் செயலாளர் கல்யாண சுந்தரம், தி.மு.க. மாவட்ட பிரதி நிதி மாணிக்கம், தமிழ் தேச மக்கள் முன்னனி தோழர் அருண் சவுரி சட்டத்திற்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக வல்லம் ஜூம்மா பள்ளிவாசலில் குடியுரிமை சட்டத்தினால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விழிபுணர்வை உண்டாக்கும் வகையில் ஜூம்மா பிரசங்கம் செய்தார். இதில், மஜக மாவட்ட துணை செயலாளர் முகைதீன், தஞ்சை மாநகர் செயலாளர் அப்துல்லாஹ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல், வாணியம்பாடி அக்மல் மற்றும் வல்லம் ஜமாத்தார்கள் வியாபாரிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சைமாநகர்மாவட்டம்
சிதம்பரத்தில் CAAவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகலை கிழித்து எரிந்த மஜகவினர் கைது!
டிச.18, சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (18/12/19) சட்ட நகல் கிழிக்கும் போராட்டம் நகர செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில் காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்திற்கு காவல்துறையினால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் திரளாக மஜக வினர் முழக்கங்களை எழுப்பியவாறு சென்று சட்ட நகலை கிழித்தெரிந்து கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞரணி நைனா முஹம்மது, கொள்கை விளக்க அணி இக்பால், MJTS பாஷா, மருத்துவ சேவை அணி அப்துல்லா, மாணவர் இந்தியா முஸரப், பைசல், ஒன்றிய நிர்வாகிகள் காஜா மைதீன், ஹாஜா, சிதம்பரம் நகர நிர்வாகிகள் சதாம் உசேன், ஹபிபுல்லா, தமீமுல் அன்சாரி, பஷீர் அஹமது உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்று கைதாகினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்தெற்குமாவட்டம்.
புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக திருச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்!
டிச.18, திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது. மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் திருச்சி.இப்ராஹீம் ஷா கண்டன உரையாற்றிட பேரா.மைதீன் கண்டன முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து நவாஸ்கனி MP, திருச்சி.வேலுசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில், மாவட்ட துணை, அணி, ஒன்றிய, மாநகர், பகுதி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கு கொண்டனர். ஜமாத்தார்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் அவர்களை அணிவகுத்து நிற்க தேவையான உதவிகளை மஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் மேற்கொண்டனர். ஒழுங்குபடுத்துவதற்கு உதவியதற்காக மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட காவல்துறை உயரதிகாரிகள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். பல்வேறு சமூகத்தவர்களும் இணைந்து வெள்ளமென திரண்டிருந்த இக்கூட்டம் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது என்றால் மிகையாகாது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம்