சிதம்பரத்தில் CAAவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகலை கிழித்து எரிந்த மஜகவினர் கைது!

டிச.18,
சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (18/12/19) சட்ட நகல் கிழிக்கும் போராட்டம் நகர செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில் காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது.

மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இப்போராட்டத்திற்கு காவல்துறையினால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் திரளாக மஜக வினர் முழக்கங்களை எழுப்பியவாறு சென்று சட்ட நகலை கிழித்தெரிந்து கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ரியாஸ், மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞரணி நைனா முஹம்மது, கொள்கை விளக்க அணி இக்பால், MJTS பாஷா, மருத்துவ சேவை அணி அப்துல்லா, மாணவர் இந்தியா முஸரப், பைசல், ஒன்றிய நிர்வாகிகள் காஜா மைதீன், ஹாஜா, சிதம்பரம் நகர நிர்வாகிகள் சதாம் உசேன், ஹபிபுல்லா, தமீமுல் அன்சாரி, பஷீர் அஹமது உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்று கைதாகினர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்தெற்குமாவட்டம்.