புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக திருச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்!

டிச.18,
திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முப்தி ரூஹுல் ஹக் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.

மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் திருச்சி.இப்ராஹீம் ஷா கண்டன உரையாற்றிட பேரா.மைதீன் கண்டன முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து நவாஸ்கனி MP, திருச்சி.வேலுசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில், மாவட்ட துணை, அணி, ஒன்றிய, மாநகர், பகுதி நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கு கொண்டனர்.

ஜமாத்தார்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் அவர்களை அணிவகுத்து நிற்க தேவையான உதவிகளை மஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் மேற்கொண்டனர்.

ஒழுங்குபடுத்துவதற்கு உதவியதற்காக மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட காவல்துறை உயரதிகாரிகள் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

பல்வேறு சமூகத்தவர்களும் இணைந்து வெள்ளமென திரண்டிருந்த இக்கூட்டம் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது என்றால் மிகையாகாது.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்