மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கறம்பக்குடியில் கடந்த வெள்ளி அன்று ( 25. 11. 16 ) புதுக்கோட்டை மாவட்ட டிசம்பர்-6 சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் துரை முகம்மது, மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது ஜான், முஹம்மது ஹாரிஸ் மற்றும் அறந்தாங்கி முபாரக், அஜ்மீர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்: மஜக ஊடகபிரிவு புதுக்கோட்டை மாவட்டம்.
தமிழகம்
தமிழகம்
விருதுநகரில் மாபெரும் பொதுக்கூட்டம் – பொருளாளர் ஹாரூன் ரஷீது உரை !
கும்பகோணம் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் மஜக அவைத்தலைவர் பங்கேற்பு…
ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #குடந்தையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக அவைத்தலைவர் #நாசர்_உமரி பங்கேற்று உரையாற்றினார். முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர், தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர். இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரையாற்றினர். ஆண்கள், பெண்கள் என எங்கும் மக்கள் கூட்டம் நிறைந்து எங்கும் பேரெழுச்சியாக இருந்தது. உலமாக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தகவல்: மஜக ஊடகப்_பிரிவு தஞ்சை வடக்கு மாவட்டம்.
நாகூரில் நிலக்கரி மாசு பரவல்… மார்க் துறைமுக அதிகாரியிடம் தமிமுன் அன்சாரி MLA புகார்!
நாகூரையொட்டி காரைக்காலில் செயல்படும் மார்க் தனியார் துறைமுகத்தில் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யல்படுகிறது. அதனால் எழும் தூசுகளால் நாகூர், வாஞ்சூர் பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது காற்று தெற்கு நோக்கி வீசுவதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் புகார் கூறினர். இன்று காலை மார்க் துறைமுக அதிகாரி ரெட்டியை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது கண்டனத்தை தெரிவித்து உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
திருச்சி கண்டன பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பபு…
ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #திருச்சியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரையாற்றினார். முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர். இதில் SDPI, TMMK, JAQH,INTJ, PFI அஹ்லே ஹதீஸ், WPI உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரையாற்றினர். உழவர் சந்தை திடல் நிறைந்து எங்கும் பேரெழுச்சியாக இருந்தது. உலமாக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தகவல்; மஜக ஊடகப்_பிரிவு (திருச்சி மாவட்டம்)