ஜமாத்துல் உலமாவின் முன் முயற்சியில் அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒருங்கிணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்து #குடந்தையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மஜக அவைத்தலைவர் #நாசர்_உமரி பங்கேற்று உரையாற்றினார். முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன்,
SDPI கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர், தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் வந்திருந்தனர்.
இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் உரையாற்றினர்.
ஆண்கள், பெண்கள் என எங்கும் மக்கள் கூட்டம் நிறைந்து எங்கும் பேரெழுச்சியாக இருந்தது. உலமாக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தகவல்:
மஜக ஊடகப்_பிரிவு
தஞ்சை வடக்கு மாவட்டம்.