நாகை.டிச.03., நாகை வடக்கு மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியத்தை சேர்ந்த கொள்ளிடம், துளச்சேந்திரபுரம், திருமுல்லைவாசல், வடகால், தைக்கால், கீரா நல்லூர், புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களை சேர்ந்த மமக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி நடைப்பெற்ற தைக்கால் கிராமத்திற்கு 3 KM முன்னதாக ஏராளமான கார்களிலும், 100 க்கு மேற்பட்ட பைக்குகளிலும் மஜக தொண்டர்கள் கொடிகளுடன் பொதுசெயலாளரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். வழி எங்கும் வாகன ஊர்வலத்தை நூற்றுகணக்கான பொதுமக்கள் சாலைகள் ஒரங்களில் கை அசைத்து வரவேற்றனர். தைக்கால் கிராமத்தில் வீரியமான மஜக முழங்கங்களோடு மஜக கொடியை பொதுச்செயலாளர் ஏற்றி வைத்தார். மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான் மற்றும் ஏராளமான மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் உடன் இருந்தனர். தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_வடக்கு_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மஜக கொடி ஏற்றும் நிகழ்வு..! மாநில நிர்வாகிகள் கொடிகளை ஏற்றிவைத்து சிற்றுரை..!!
கிருஷ்ணகிரி.டிச.03., மனிதநேய ஜனநாயக கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் நேற்று 02.12.2017 இரண்டு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவின் உறுப்பினர் J.S.ரிபாயி அவர்கள் மஜகவில் இணைந்து முதன் முதலாக கொடி ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக ஓசூர் நகரின் மின் அலுவலகம் முன்பாக மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். இந் நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் சிக்கந்தர் அமீன், வசிம் அக்ரம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சைய்யது அபுதாஹிர், மண்ணிவாக்கம் யூசுப், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அன்வர், மாவட்ட பொருளார் சையத் நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஷபியுல்லாஹ், சர்தார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜாக்கிர், நகர செயலாளர் உமர், சம்சீர், சாதிக், மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கிருஷ்ணகிரி_ மாவட்டம் 03.12.2017
மாணவர் இந்தியா பொறுப்பாளர் செய்யது முகையதீன் மரணம் மஜக இரங்கல்!
#மாணவர்_இந்தியா_பொறுப்பாளர்_செய்யது_முகையதீன்_மரணம்_மஜக_இரங்கல்! (மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் செய்தி) கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் நகர மாணவர் இந்தியாவின் துணை செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பால் உயிர் இழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது (இன்னா லில்லாஹி…) கல்லூரி பயிலும் போது கல்லூரியில் வசந்த கால கணவுகளோடு வலம் வந்த ஒரு வண்ணத்து பூச்சியின் வாழ்க்கை இவ்வளவு விரைவில் முடிந்து போனது பெரும் துயரமாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நணபர்களுக்கும், மாணவர் இந்தியா சகோதர்களுக்கும், பரங்கிபேட்டை பொதுமக்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.அவரது மறுமை வாழ்வு சிறப்படைய இறைவனிடம் பிராத்திக்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 03.12.17
மஜக ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜருஹிஸ் ஜமா கலந்து கொண்டார். TR.முன்னா (எ) நஸிர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாணியம்பாடியில் நடக்கவிருக்கும் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு ஏராளமான மக்களை திரட்டுவது குறித்து பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதில் மாற்று மத சகோதரர் சரவணன் என்பவர் தாமாக முன்வந்து தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார். இந் நிகழ்வில் நகர துணைச் செயலாளர்கள் அமீர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் இம்ரான் அஹம்த், நகர தொழில் சஙக அணி செயலாளர் சுஹேப் அஹ்மத், முதஸீர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் ஷாயின்ஷா, ஆகிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 02.12.2017
சீரத்துன் நபி விழா..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!
தஞ்சை.டிச.02. ,தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா உடையநாட்டில் சுபைதா அம்மாள் அரபி கல்லூரியில் ஆண்டு விழாவும், சீரத்துன் நபி விழாவும் நடைபெற்றது. இதில் இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்ற தலைப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வில் கல்லூரி தாளாளரும், மலேசியாவில் புகழ்பெற்ற சுபைதா குழுமத்தின் தலைவருமான டத்தோ.அஜீஸ் அவர்கள், மஜக துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நச்சிக்குளம் தாஜுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி ஸலாம், முன்னாள் தலைமை ஆசிரியர் குலாம், அரபி கல்லூரி முதல்வர் வருசை இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந் நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவிகளும், 100க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்களும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு பிறகு ECR சாலையில் உள்ள சேதுபாவாசத்திரம் சென்று அங்கு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட கபர்ஸ்தான் இடத்தை பார்வையிட சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர். இது குறித்து தொகுதி MLA திரு.கோவிந்த ராஜன் மற்றும் DSP ஆகியோர் கவனத்திற்கு எடுத்து செல்வதாக பொதுச்செயலாளர் அவர்கள் உறுதியளித்தார். அதன் பிறகு சேதுபாவாசத்திரத்தில் பொதுச் செயலாளர் மஜக கொடியை ஏற்றி வைத்தார். இடையில் மரைக்காவலசை மற்றும் உடையநாடு