சீர்காழி.ஜுன்.06., நாகை வடக்கு மாவட்டம் தைக்கால் துளசேந்திரபும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் கிளை சார்பாக #இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 அடி நீளத்தில் பந்தல் போடப்பட்டு பிரமாண்ட ஏற்பாட்டுடன் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் P.V. பாரதி (#அதிமுக), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் (#திமுக), #பாமக துணைப் பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, சே.ரகுராஜ் (#விசிக), S.ஜெயராமன் ஒன்றிய செயலாளர் (அதிமுக) கமாலுதீன் (#SDPI) உள்ளிட்ட எதிரும் புதிருமான அரசியல் கட்சியின் பிரமுகர்கள், மஜகவின் அழைப்பை ஏற்று ஒரே மேடையில் கூடினர். 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் வருகை தந்து சிறப்பித்தனர். முக்கியமாக தைக்கால் ஜமாத்தினர் மொத்தமாக வருகை தந்து நிகழ்ச்சிக்கு மெறுகூட்டினர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனரும், திருமதி துர்கா அவர்களின் தம்பியுமான மருத்துவர் இராஜமூர்த்தி அவர்கள் நோன்பின் மாண்பு குறித்து சிறப்பானதொரு விளக்கவுரையாற்றினார். அவரது உரை அனைத்து மதத்தினர்களின் உள்ளத்தையும் கவரும் வகையில் இருந்து. சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி அவர்கள், துளியும் அரசியல் பேசாமல், நோன்பு குறித்தும், அது ஏற்படுத்தும் நல்ல நோக்கம் குறித்தும் உரையாற்றினார். #மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA
தமிழகம்
தமிழகம்
மஜக தஞ்சை வடக்கு மாவட்ட இஃப்தார் நிகழ்ச்சி..!
குடந்தை.ஜுன்.09., தஞ்சை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் #இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் தலைமையில் வழுத்தூர் ராயல் மஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக #அஞ்சுமன் அறிவாக நிறுவனர் D.M. ஜபருல்லாஹ், சமூக ஆர்வலர் M.J. அப்துல் ரவூஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் #மஜக மாநில செயலாளர் ராசுதீன், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_வடக்கு_மாவட்டம் 09.06.18
மஜக சார்பில் கறம்பக்குடியில் அன்பால் இணைவோம் இஃப்தார் நிகழ்ச்சி… !
கறம்பக்குடி.ஜூன்.09., புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் #அன்பால்_இணைவோம் #இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட துணைச்செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் #மஜக மாநில செயலாளர் #நாச்சிக்குளம்_தாஜூதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் விஜய ரவி பல்லவராயர் அவர்கள் மற்றும் சிவ.திருமேணிநாதன் AEO, இலக்கிய மன்ற தலைவர் C.வேலு MA, மாரிக்கண்ணு ஆசிரியர், DR .சந்திரசேகரன் MBBS , வியாபாரிகள் சங்க தலைவர் K.சுரேஷ் , BJP மாவட்ட செயலாளர் தமிழரன், விஜயன் ML , சம்பத் ஆசிரியர், ஜமாத் கமிட்டி தலைவர் அல்ஹாஜி.A.M. கலிபுல்லா , கலீல்ரஹ்மான் உலவி, சுஹபத்அலி மிஸ்பாஹி , ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த சிறப்பான நிகழ்வில் கறம்பக்குடி வர்ததக சங்கத்தினர் , வியாபாரிகள் சங்கத்தினர் , ரோட்டரி சங்கத்தினர் , அனைத்து கட்சி பிரமுகர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், மஜக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றி ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர். இறுதியாக மஜக
நாகையில் மாற்று திறனாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி..! நாகை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்..!!
நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து (2017-18) மாற்று திறனாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் (WATER BED) வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் பயணாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் வழங்கினர். இந் நிகழ்வில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 09.06.18
காஞ்சி வடக்கு மாவட்டம் பல்லாவரத்தில் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு..!!
காஞ்சி.ஜூன்.08., காஞ்சி வடக்கு மாவட்டம் பம்மல் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக பல்லாவரம் இனாயத் மஹாலில் #இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி பம்மல் நகர செயலாளர் A.மக்பூல் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மஜக பொதுசெயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, மாநில செயலாளர் NA.தைமியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாநில செயலாளர் பம்மல் சலீம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் N.அன்வர்பாஷா, தாம்பரம் தாரிக் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் A.யாக்கூப், அப்துல்காதர், ரஹமத்துல்லாஹ், காஜா சலிம் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர். இந்நிகழ்வில் பம்மல், பல்லாவரம், கன்டோன்ட்மென்ட், நகர நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்