நாகையில் மாற்று திறனாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி..! நாகை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்..!!

நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து (2017-18) மாற்று திறனாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் (WATER BED) வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் பயணாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் வழங்கினர்.

இந் நிகழ்வில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
09.06.18