You are here

நுபுர் சர்மாவை கைது செய்…! கடலூர் வடக்கு மஜக சார்பில் ரயில் நிலைய முற்றுகை போராட்டம்! மாநிலச் துனைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை !

ஜூன்; 21.,

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசிய பாஜகவின் நிர்வாகிகள் நுபுர் சர்மா, மற்றும் நவீன் ஜிண்டால், ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், அதற்காக குரல் கொடுத்த உத்திரப்பிரதேச மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்த பாசிச பாஜக அரசை கண்டித்தும்.

கடலூர் வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கடலூர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் மாவட்ட செயலாளர் A.மன்சூர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

போராட்டத்தில் மஜக மாநில துனைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் திருமார்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் O.A.நூர் முஹம்மத்,மாவட்ட பொருளாளர் A.ரியாஸ் ரஹ்மான்,மாவட்ட துனை செயலாளர்கள் பண்ருட்டி யாசின்,முஹம்மது ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துனை செயலாளர் குலோப்,மக்கள் அதிகாரம் பாலு, கடலூர் இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் நசுர்தீன்,மஜக நகர பொருளாளர் ஹாரூன் ரஷீத்,உமர் பாரூக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
20.06.2022

Top