திருப்பூரில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

திருப்பூர்.ஜுன்.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது முன்னிலை வகித்தார்,

இந்த நிர்வாகக் கூட்டத்தில்
வருகின்ற 25-07-18 புதன்கிழமை அன்று திருப்பூர் மாநகரின் முக்கிய இடங்களில் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களை அழைத்து #மஜக கொடியேற்று விழா நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது,
அந்த நிகழ்ச்சியை சிறப்பாக முடித்ததும்.

விரைவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்து பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் கூட்டத்தில்
விரிவாக பேசப்பட்டது.

கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர், காதர் கான், மாவட்ட துணைச்செயலாளர்கள்
அக்பர் அலி, மீரான், லியாகத் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட வர்த்தகர் அணிச்செயலாளர் சேக் பரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
27-06-2018