நாகை மாவட்ட சிறந்த மருத்துவராக வேதாரண்யம் அரசு மருத்துவமனை Dr_Y_அக்பர்_அலிக்கு விருது..! MLAக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி நேரில் வாழ்த்து..!!

சென்னை. ஜூன்.29., நேற்று (28-06-2018) தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக மாநில அளவிலான சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறந்த மருத்துவராக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் #தோப்புத்துறையை சேர்ந்த #Dr_Y_அக்பர்_அலி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது மாநிலஅளவில் மிக சிறந்த ஒரு அங்கீகாரம் ; இது நேரிடையாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அலுவலகத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசால் வழங்கப்படும் உயர்ந்த மகுடம்.

இவ்விருதை பெற்ற டாக்டர் அகபர் அலி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வருகை தந்து, #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #நாகை_சட்டமன்ற_உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி மற்றும் கொங்கு இளைஞர் பேரவை #உ_தனியரசு_MLA ஆகியோரிடம் நேரில் சந்தித்து வாழ்த்துப்பேற்றார்கள்.

இச்சந்திப்பில் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் டாக்டர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை