கன்னியாகுமரியில் மஜக வில் இணைந்த இளைஞர்கள்..

ஜூன் :18.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக, கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தில் மாவட்ட துணை செயலாளர் அமீர்கான், அவர்கள் தலைமையில்

மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி அவர்களின் முன்னிலையில் திரளான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் பணிகள் குறித்தும் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் உரையாற்றி உறுப்பினர் அட்டை வழங்கினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் முஜீப் ரஹ்மான் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கே எஸ் ரபீக், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் யாசர் அரபாத், மாநகரச் செயலாளர் மாஹீன் இப்ராஹிம், மாநகர இளைஞரணி செயலாளர் மாஜித் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கன்னியாகுமரி_மாவட்டம்
17.06.2022