You are here

தூத்துக்குடியில்!! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற மாணவி!! மஜக வினர் நேரில் சந்தித்து வாழ்த்து!!

தூத்துக்குடி ஜூன்:21

நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்றைய தினம் வெளியானது இதில் தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூரை சேர்ந்த துர்கா, என்ற மாணவி தமிழ்மொழி பாடத்தில் முழு மதிப்பெண் நூற்றுக்கு நூறு பெற்று தேர்ச்சி பெற்றார்.

தமிழகம் தழுவிய அளவில் முழு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி இவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவரது தந்தை செல்வகுமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முகமது நஜீப், அவர்கள் தலைமையில் மஜக நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகம்மது சபிர், காயல் நகர செயலாளர் இப்னுமாஜா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முஜிபுர் ரகுமான், ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
21-06-2022

Top