சேலம்:ஆக.04., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் சர்புதீன், அவர்கள் அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் சனாவுல்லாகான், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஹசன், மாவட்ட பொருளாளர் விக்னேஷ், மாவட்ட துணை செயலாளர் சாகுல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஷா, மாவட்ட செயலாளர் தஸ்தகீர், மாவட்ட இளைஞரணி பொருளாளர் யாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அஷ்ரப், கொண்டாலம்பட்டி பகுதி செயலாளர் மைதீன், பொருளாளர் சரத்குமார், துணை செயலாளர் சவுக்கத் அலி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சேலம்_மாவட்டம் 04.08.2020
இஸ்லாமிய கலாச்சார பேரவை
குவைத் மண்டலம் சார்பாக பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி.!
குவைத்-ஆகஸ்ட்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டலம் சார்பாக தியாகத் திருநாளை முன்னிட்டு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ZOOM காணொளி மூலம் 31-07-2020 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையேற்க மண்டல துணைச் செயலாளர் மாயவரம் சபீர் அஹமது அவர்கள் நீதிபோதனை வழங்க கோணுலாம்பள்ளம் அன்சாரி வரவேற்ப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் மெளலவி J.S.ரிபாய் ரஷாதி அவர்கள் "நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள்" என்ற தலைப்பின் கீழ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் Zoom காணொலி மூலம் திரளான மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தூம் அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவுற்றது. தகவல் : #மனிதநேய_கலாச்சார_பேரவை #குவைத்_மண்டலம் 31-07-2020
மஜக சொந்தம் இதயத்துல்லாவுக்காக பிரார்த்திப்போம்!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இரங்கல் பதிவு!
அரியலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளராக பணியாற்றிய அருமை சகோதரர் இதயத்துல்லாஹ், அவர்கள் இன்று இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். புன்சிரிப்புடன் உற்சாகமாக பொது சேவையாற்றிய அவரது மறைவு, அம் மாவட்டத்தில் நம் கட்சிக்கு பேரிழப்பாகும். வாழும் வயதில் அவரை பறிகொடுத்த அவரது குடும்பத்தினர் மற்றும் அரியலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சொந்தங்கள் அனைவருக்கும் எமது இரங்கலை கூறி, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி O1.08.2020
தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
உலகின் பல்வேறு பகுதிகளில் 200 கோடி மக்கள் கொண்டாடும் உன்னத பண்டிகைகளில் ஒன்று ஈதுல் அல்ஹா எனும் தியாகத்திருநாள் ஆகும். நம் நாட்டில் பக்ரீத் பண்டிகை என்றும் ஹஜ் பெருநாள் என்றும் பல்வேறு பெயர்களில் இது கொண்டாடப்படுகிறது. முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் போற்றும் நபி இப்ராகிம் (அலை) அவர்கள், தான் கண்ட கனவின்படி, தன் அருமை மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை ஒன்று மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறியது. அதன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார். இறைக்கட்டளை என்றதும், தவமாய் தவமிருந்து பெற்ற தன் அருமை மகனையே பலிக் கொடுக்க முனைந்த இந்த தியாகம் தான் இப்பண்டிகையின் பின்னணியாகும். ஆம். தியாகங்கள் தான் வரலாறுகளாகும். இதை நினைவு கூறும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் படி, அன்று முதல் இன்று வரை பல்கிப் பெருகும் கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை முஸ்லிம்கள் பலியிட்டு அதன் இறைச்சியை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள். உன்னிப்பாக கவனித்தால் இது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சமநிலையை பாதுகாக்க உதவுகிறது என்பதையும்
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!
மேட்டுப்பாளையம்:ஜூலை.30., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் M.ஆரிஃப் அப்பாஸ், அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சுல்தான், யாசர் அரபாத், SN.சேட், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் IKP மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, MJTS மாவட்ட பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகமது அசாருதீன், நகர செயலாளர் ரசீது அகமது, சதாம், பீர் பாவா,ஆசிக்,ஹக்கீம், மற்றும் நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டமாக சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மேட்டுப்பாளையம்_நகரம் #கோவை_வடக்கு_மாவட்டம், 30.07.2020