கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!

மேட்டுப்பாளையம்:ஜூலை.30.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட செயலாளர் M.ஆரிஃப் அப்பாஸ், அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சுல்தான், யாசர் அரபாத், SN.சேட், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் IKP மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, MJTS மாவட்ட பொருளாளர் காஜா மைதீன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகமது அசாருதீன், நகர செயலாளர் ரசீது அகமது, சதாம், பீர் பாவா,ஆசிக்,ஹக்கீம்,
மற்றும் நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்டமாக சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மேட்டுப்பாளையம்_நகரம்
#கோவை_வடக்கு_மாவட்டம்,
30.07.2020