மனிதநேய ஜனநாயக கட்சியில் மத்திய சென்னை மாவட்டமாக இருந்ததை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு, இனிமேல் மத்திய சென்னை கிழக்கு மற்றும் மத்திய சென்னை மேற்கு என கிழ்கண்டவாறு செயல்படும். மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கிழ்கண்டவாறு நியமிக்கப்படுகிறார்கள். மத்திய சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் I.முஹம்மது இப்ராஹிம் Mobile No: 9884440551 மாவட்டப் பொருளாளர் S. அன்வர் இப்ராஹிம் Mobile No: 7418222111 மாவட்ட துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது Mobile No: 9600119001 மாவட்ட இளைஞர்அணி G. முஹம்மது கனி Mobile No: 9940619631 இவர்களுக்கு கட்சியின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகளாக இருந்தவர்கள் இனிமேல் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக செயல்படுவார்கள். இவண், M. தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 10.11.2017
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மதமுமுக மஜகவுடன் இணைப்பு விழா..! நவம்பர் புரட்சி என்று மஜக பொருளாளர் எழுச்சி உரை…!!
சென்னை.நவ.10., தமிழகத்தில் செயல்பட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்கிற அமைப்பு அதன் தலைவர் சீனி முஹம்மது தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் நேற்று 09.11.2017 மாலை சென்னை மண்ணடியில் உள்ள ஆயிஷா மஹாலில் மனிதநேய ஜனநாயக கட்சியுடன் இணைந்தது. மிக சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களின் முன்னிலையில் மதமுமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மஜகவில் இணைந்தனர். மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சீனி முஹம்மது அவர்கள் உரையில் நாட்டில் நடக்கும் பாசிச அரசியல் பற்றியும், இனி வரவிருக்கும் டிசம்பர் 6 இரயில் முற்றுகை பற்றியும் ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் மஜகவின் தொடர்ச்சியாக பல அமைப்பினர் சேர்ந்து வருவதையும், நவம்பர் புரட்சி என்ற தலைப்பில் தொடர்ச்சியாக புளியங்குடி செய்யது அலி, தாரிக் வரிசையில் தற்போது சீனி முஹம்மது போன்ற இன்னும் பல தலைவர்கள் விரைவில் இணைய உள்ளதாக கூறினார். இவ்விழாவினை மாநில துணைச் செயலாளர் ஷமிம் அகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா கட்சியின்
தோழர்.சீமான் இல்லத்தில் மஜக மாநில நிர்வாகிகள்…
காஞ்சி.நவ.09., மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன்ரசீத் M.com அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் தோழர்.சீமான் அவர்களை நேற்று (08.11.17) அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் மாநில செயலாளர் N.A.தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர்பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், காஞ்சி தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் N.அன்வர் பாஷா, துறைமுகம் பகுதி செயலாளர் சீனி முஹம்மது, துறைமுகம் பகுதி நிர்வாகிகள் அஸ்கர்அலி மற்றும் அம்ஸத் ஆகியோர் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_மாவட்டம்.
இளையான்குடியில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜக மக்கள் திரள் பொதுக்கூட்டம்..!
சிவகங்கை.நவ.05.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரம் சார்பில் "மாற்றத்தை நோக்கி" எனும் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம் மஜக நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.Com மற்றும் #நாம்_தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் #சீமான் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சி உரைகள் நிகழ்த்தினார்கள். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.முஹம்மது நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்ணை செல்லச்சாமி, தலைமை கழக பேச்சாளர் கோவை T.A.நாசர், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர்கள் முஹம்மது சைப்புல்லாஹ், வசிம் அக்ரம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பஷிர் அஹமத், செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகிய மாநில நிர்வாகிகள் மற்றும், மதுரை மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, விருதுநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இலியாஸ், மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், செய்யது உமர் முக்த்தார், இராமநாதபுரம்
கந்து வட்டி கொடுமையால் மற்றொரு மரணம்..! SPயை சந்தித்தார் மஜக பொருளாளர்..!!
திண்டுக்கல்.நவ.04., திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ரபீக் அவர்களின் மனைவி தில்ஷாத் பேகம் என்பவர் மகளிர் சுய உதவி குழுவுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். இந்நிலையில் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பல நபர்களிடமிருந்து கடன் வாங்கி கொடுத்துள்ளார். கொடுக்கல் வாங்கல் அதிகரித்த நிலையில் கடன் வாங்கிய நபர்களிடமிருந்து வட்டியின் காரணமாக நெருக்கடி அதிகரித்திருக்கிறது. மன உளைச்சல் காரணமாக நேற்று 02/11/2017 காலை 11மணியளவில் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் தற்கொலை செய்ய காரணமாக இருந்தவர்ளை கைது செய்தால்தான் தில்ஷாத் பேகத்தின் உடலை வாங்குவோம் என்று உறவினர்களும், பொது மக்களும் தர்ணாவில் ஈடுப்பட்டுனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். பிரச்சனையை திசை திருப்ப சில காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதை மாநில பெருளாளர் அவர்களிடம் தெரியப்படுத்தபட்டது இந்த விஷயம் பொதுமக்களிடையே பரவ மருத்துவமனையில் பதற்றம் அதிகமானது. இந்நிலையில்