மதமுமுக மஜகவுடன் இணைப்பு விழா..! நவம்பர் புரட்சி என்று மஜக பொருளாளர் எழுச்சி உரை…!!

image

image

image

image

image

சென்னை.நவ.10., தமிழகத்தில் செயல்பட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்கிற அமைப்பு அதன் தலைவர் சீனி முஹம்மது தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் நேற்று 09.11.2017 மாலை சென்னை மண்ணடியில் உள்ள ஆயிஷா மஹாலில் மனிதநேய ஜனநாயக கட்சியுடன் இணைந்தது.

மிக சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com அவர்களின் முன்னிலையில் மதமுமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் மஜகவில் இணைந்தனர்.

மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் சீனி முஹம்மது அவர்கள் உரையில் நாட்டில் நடக்கும் பாசிச அரசியல் பற்றியும், இனி வரவிருக்கும் டிசம்பர் 6 இரயில் முற்றுகை பற்றியும் ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தினார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் மஜகவின் தொடர்ச்சியாக பல அமைப்பினர் சேர்ந்து வருவதையும், நவம்பர் புரட்சி என்ற தலைப்பில் தொடர்ச்சியாக புளியங்குடி செய்யது அலி, தாரிக் வரிசையில் தற்போது சீனி முஹம்மது போன்ற இன்னும் பல தலைவர்கள் விரைவில்  இணைய உள்ளதாக கூறினார்.

இவ்விழாவினை மாநில துணைச் செயலாளர் ஷமிம் அகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா கட்சியின் கொள்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் அ.சாதிக் பாட்சா,  புதுமடம் அனிஸ், முஹம்மது சைபுல்லாஹ், மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் அவர்கள் நன்றியுரை  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் சிக்கந்தர் பாட்சா, மற்றும் மாவட்ட , நகர , கிளை நிர்வாகிகள்  உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை