இந்தியாவின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர், எழுத்தாளர், அறிவுஜீவி என கொண்டாடப்படும் ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களை கைது செய்திருப்பதை மனித நேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வு (NIA) அமைப்பால் கடந்த 14.04.2020 அன்று கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார். https://m.facebook.com/story.php?story_fbid=2409167445849683&id=700424783390633 அவருக்கு ஆதரவாக எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்ட நாடறிந்த அறிவுஜீவிகளும், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்களும்,மனித உரிமை மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களும் களமிறங்கி போர் குரல் எழுப்பி வருகின்றனர். வெறுப்பு அரசியலில் வழியே பிரிவினைவாத நடவடிக்கைகளை வளர்த்து வரும் தீய சக்திகள் பாதுகாக்கப்படுவதும், தேசத்தின் முகவரிகளாக இருக்கும் அறிவுஜீவிகள் ஒடுக்கப்படுவதும் வேதனையளிக்கிறது. தங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுபவர்களை அடக்கு முறை சட்டங்கள் வழியே ஒடுக்க நினைப்பது ஃபாஸிசத்தின் கோர முகமாகும். கொரணா பரபரப்பில் நாடே மூழ்கியிருக்கும் சமயம் பார்த்து அவரை கைது செய்திருப்பது ஒரு வகை அரச தந்திரப் போக்காகும். அறிவுஜீவிகளை ஒழிக்க நினைக்கும் சர்வாதிகார அரசுகள் வெற்றிப் பெற்றதில்லை என்பதை வரலாற்றில் படிக்கிறோம். அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று, அறிவுத் தளத்தில் அவருக்கு எதிராக செயலாற்றுவதே சிறந்த ஆளுமைப்
கொரோனா வைரஸ்
வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த கொரோனா நிவாராண சேவைகுழு!
வேலூர்.ஏப்ரல்.20., கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாநகரில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா, RN பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் பொது மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையில் இருந்து தொண்டுழியர்களாக பணியாற்றும் நோக்கில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து கொரோணா நிவாராண சேவைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு உறுப்பினர்கள் இன்று தமது கோரிக்கை மனுவுடன் மாவட்ட ஆட்சியர் திரு.ஷண்முக சுந்தரம் IAS., அவர்களை சந்தித்தனர், கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டவர் உடனடியாக கோரிக்கைகளை பரிசிலிப்பதாகவும், இக்குழு பணியாற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். இச் சந்திப்பில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அப்சர் சையத், மஜக மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் அமீன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் (சிறுபான்மை பிரிவு) வாஹித் பாஷா, தமுமுக மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், வெல்பேஃர் கட்சி மாவட்டச் செயலாளர் அக்பர் பாஷா, இஸ்லாமிய ஜனநாயக பேரவை (விசிக) மாவட்ட அமைப்பாளர் சையது
சுங்கச்சாவடிகள் இயங்க மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது! முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாத நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் வழக்கம் போல் செயல்பட்டு கட்டண வசூல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கண்டனத்திற்குரியதாகும். கொரணா நோய் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பும், பீதியும் குறையாத நிலையில் மக்கள் மிகப் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளார்கள். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகள் செயல்படும் என அறிவித்திருப்பது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும். https://m.facebook.com/story.php?story_fbid=2406932309406530&id=700424783390633 இதன் மூலம் அவசரப் பயணம் மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவது ஒரு புறமெனில், சரக்குப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக விலைவாசி ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விடும். அந்த வகையில் இது மக்களின் மீது நடத்தப்படும் பொருளாதார தாக்குதலாகும். மத்திய அரசு இதுவரை மக்களுக்கு நேரடியாக எந்த உதவியும் செய்யாத நிலையில், அவர்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே பெரிய உதவியாகும். இந்தியா முழுதும் உள்ள சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களால் ஏலம் எடுக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இப்போதைய நிலையில் அவற்றை செயல்பட வைப்பது மக்களிடையே மேலும் கடும் அதிருப்தியைத் தான் உருவாக்கும். எனவே, மத்திய அரசு இம்முடிவை திரும்ப
வேதைநகரம் தோப்புத்துறை மஜக சார்பில் இரண்டாம் கட்ட நிவாரண உதவிகள்!
ஏப்.19, வேதாரண்யம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தோப்புத்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்கள் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ், மாநில செயற்குழு உறுப்பினர் சேக் மன்சூர் உள்ளிட்ட மஜக வினர் உடனிருந்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
ஆயங்குடியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!
ஏப்.19, இன்று கடலூர் தெற்கு, ஆயங்குடி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்த மூலிகை மருந்தான 'கபசுர குடிநீர்' மஜகவினால் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. மஜக அவசர ஊர்தி மூலம் எடுத்து சென்று ஊராட்சி முழுவதும் வீடுவீடாக சென்று மஜகவினர் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து விநியோகம் செய்திட பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்தினர். இதில் மஜக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவரும், மஜக மாவட்டப் பொருளாளருமான A.S பஜில் முஹம்மது, குவைத் மண்டல நிர்வாகி நாசர், நகர செயலாளர் புர்ஹானுதீன், நகர நிர்வாகிகள் சாது, சுபகத்துல்லாஹ், அமானுல்லாஹ், பஜில் உள்ளிட்ட மஜகவினர் இப்பணிகளை மேற்கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்தெற்குமாவட்டம்.