சென்னை.டிச.13., பிரபல சமூக செயற்பாட்டாளரும், நாடறிந்த போராட்ட வாதியுமான திருமதி. மேதா பட்கர் அவர்கள் இன்று சென்னை வருகை தந்தார். இன்று அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்துப் பேசினார் அப்போது அவருடன் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்களும், மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷஃபி அவர்களும் உடன் இருந்தனர். 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் ஜாதி, மத பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்வது குறித்தும், மஜக முன்னெடுக்கும் போராட்டம் குறித்து அவரிடம் பொதுச்செயலாளர் விளக்கினார். ஜனவரி-8 2022 அன்று கோவையில் மஜக முன்னெடுக்கும் கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தார். மாநில இளைஞரணி செயலாளர் முகமது அசாருதீன், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோரும் உடன் இருந்தனர். இச்சந்திப்பின்போது சுப.உதயகுமார், இனிகோ இருதயராஜ் MLA., ஆகியோரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 13.12.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
ஜனவரி-08 கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம்! கோவையில் மஜக மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!
டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 08ஆம் தேதி அன்று சாதி,மத, வழக்கு, பேதமின்றி 10.ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. அது தொடர்பான மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட அலுவலகத்தில் வைத்து கட்சியின் துணை பொதுச்செயலாளர் செய்யது அஹமது பாருக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச்செயலாளர் A.K. சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, Ikp மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று சிறைச்சாலை முற்றுகை போராட்டம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மஜீத், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சுல்தான், கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் சேக் மைதீன்,
நலம் பெற்று வரும் சீனி பாய்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் சந்திப்பு.!
சென்னை.டிசம்பர்.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் சீனி முகம்மது அவர்கள் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது வீட்டில் ஒய்வில் உள்ளார். கட்சியினர் அடிக்கடி சென்று அவரை சந்தித்து வருகின்றனர். இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அவரது வீட்டிற்கு சென்று நேரில் நலம் விசாரித்தார். தற்போது நன்கு உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியதும், வழக்கமான பணிகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் சினி முகம்மது அவர்கள் கூறினார். சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக ஜனவரி 8 அன்று கோவையில் அறிவிக்கப்பட்ட போராட்டம் தனக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்ததாகவும் கூறினார். இந்த போராட்டத்தில் தாங்கள் ஆரோக்கியத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பின் போது மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லிவாக்கம் சாகுல் ஹமீது, தென் சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் இப்ராகிம் ஆகியோர் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்திய_சென்னை_மேற்கு_மாவட்டம் 13.12.2021
ஜனவரி-08 கோவை முற்றுகை போராட்டம்! தென்காசி மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்.
டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போரை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க தென்காசி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அச்சன்புதூர் பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு தென்காசி மாவட்டத்தின் சார்பாக திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அதம்பின் ஹனிபா, மாவட்ட துணை செயலாளர்கள் வாவை இனையத்துல்லா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன், வணிகர் அணி மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரவி, இளைஞரணி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் அச்சன்புதூர் அன்வர், இளைஞரணி துணைச் செயலாளர் தர்வீஸ் மைதீன், சங்கரன் கோவில் நகர செயலாளர் சுல்தான், நகர பொருளாளர் சேக் முகம்மது, தென்காசி
ஜனவரி-08 கோவை முற்றுகை போராட்டம்! கோவையில் மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்! துணை பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!
டிச:13., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனவரி 8 அன்று சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தில் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க கோவை மாநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் A.அப்துல் பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், ஆகியோர் பங்கேற்று முற்றுகை போராட்டம் தொடர்பான முதற்கட்ட ஆயத்த பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், HM.ஹனீபா, ஆகியோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 12.12.2021