குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம் 10/03/2017 வெள்ளிக்கிழமை அன்று முர்காப் உடுப்பி ரெஸ்டாரெண்டில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நடைபெற்றது. இதில் முன்னதாக மண்டல IKP செயலாளர் சகோ. இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. பரங்கிப்பேட்டை ஹாஜா மஹ்தூம் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் மண்டலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள், திட்டங்கள், நிர்வாக ரீதியான ஆலோசணைகளை வழங்கினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் √ கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கருத்தரங்க நிகழ்ச்சி நடத்துவது. √ உம்ரா பயணம் செல்ல IKP யின் மூலம் ஏற்பாடு செய்வது. √ இரத்த தானம் முகாம் நடத்துவது. √ ரமலான் மாதத்தில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிகள் மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடத்துவது. √ உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. இதில் மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியாக செயற்குழு உறுப்பினர் சகோ. பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூற இனிதாக கூட்டம் நிறைவடைந்தது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING குவைத் மண்டலம் 55278478 -
இரண்டாம் ஆண்டில் மஜக
இரண்டாம் ஆண்டில் மஜக
திருவள்ளுர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்…
திருவள்ளூர்.மார்ச்.08., திருவள்ளுர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அக்பர் உசேன் தலைமையில் 07.03.17 அன்று ஆவடியில் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ் மற்றும் தலைமை கழக பேச்சாளர் பூவை அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. இன்ஷா அல்லாஹ் மார்ச் 31ம் தேதி ஆவடியில் எழுச்சி பொதுக் கூட்டம் நடத்துவது எனவும், அதே போல் ஏப்ரல்.21 அன்று அம்பத்தூரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது திருவள்ளுர் பகுதியில் வக்பு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் நிறுவனத்திடமிருந்து வக்பு இடத்தை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப் பட்டது இக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் பகுர்தீன், ஆவடி நகர நிர்வாகிகள் மற்றும் பூவை நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழிநுட்ப அணி. #MJK_IT_WING திருவள்ளூர் (மே) மாவட்டம். 07.03.2017
மஜக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நெல்லை (கி) சார்பில் மரம், மரக்கன்றுகள் நடும் நிகழ்வு…
நெல்லை.மார்ச்.08., திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வை கொண்டாடும் வகையில் தலைமை அறிவுறுத்தளின் பேரில் நகரத்தின் முக்கிய இடங்களில் மரமாகவும், மரகன்றுகளாகவும் மற்றும் மூலிகை செடிகள் நாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, (MJK IT-WING) நெல்லை கிழக்கு மாவட்டம். 08.02.2017
மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLAக்கு சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் வரவேற்பு .!
சிங்கப்பூர்.மார்ச்.07., சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) ஏற்பாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி முஸ்தபா சென்டரின் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது . சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் செயலாளர் Y.செய்யது யூசுப் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் . இதில் சிங்கப்பூரில் செயல்படும் கடையநல்லூர் , தென்காசி , கீழக்கரை , நாகூர் , முத்துப்பேட்டை , பொதக்குடி , கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர் . தங்கள் ஊரை சேர்ந்தவர் என்ற பாச உணர்வோடு சிங்கப்பூர் வாழ் தோப்புத்துறை வட்டார மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து பாராட்டினர் . இதில் சமூக ஆர்வலர்கள் , தொழிலதிபர்கள் , ஊடகத்துறையினர் என பலரும் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் அவர்கள் நாகையின் MLA ஆனதற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர் . தகவல் மனிதநேய கலாச்சாரப் பேரவை. #MJK_IT_WING சிங்கப்பூர் மண்டலம் 07.03.2017
சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை FIM சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு பாராட்டு!
சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (Federation Of Indian Muslim) 26 வது பொதுக் கூட்டம் சிங்கப்பூர் பென்கூலன் மஸ்ஜித் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது . தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிங்கப்பூர் சென்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . இக்கூட்டத்தில் , கடந்த 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்கு தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு ஹாஜி . சர்புதீன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் . அதன் பிறகு பென்கூலன் மஸ்ஜித் நிர்வாக தலைவர் ஹாஜி. முஹம்மது ரஃபிக் அவர்கள் சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவையின் (FIM) சார்பில் பொற்கிழி வழங்கி கெளரவித்து பாராட்டி சிறப்பித்தார்கள் . இந்நிகழ்வில் MES நிறுவனத்தின் தலைவர் ஹாஜி. அப்துல் ஜலில் , சிங்கப்பூர் ஐக்கிய இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் ஹாஜி. முகம்மது கெளஸ் , துணைத் தலைவர் ஹாஜி . ஜெய்னுலாபுதீன் மற்றும் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள்