அமீரகம்.ஜன.14., அபுதாபி மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP) நிர்வாகிகள் கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி.முஹம்மது தையூப் அவர்கள் தலைமையில் கடந்த 12-01-2018 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் எதிர்வரும் 26-01-2018 அன்று அபுதாபி மண்டல பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது எனவும், தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுநிகழ்ச்சியை நடத்துவது என்றும், மாதம் ஒருமுறை மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. தகவல் : #MKP_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு #மனிதநேய_கலாச்சார_பேரவை #ஐக்கிய_அரபு_அமீரகம் 12.01.18
செய்திகள்
MKP கத்தார் மண்டல ஆலோசனை கூட்டம்..!
கத்தார்.ஜன.14., மனிதநேய கலாச்சார பேரைவை (MKP) கத்தார் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் (12.01.18) நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் உவைஸ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் KST.அப்துல் அஜிஸ், மண்டல துணைச் செயலாளர்கள் சகாப்தீன் மற்றும் பஷீர், பொருளாலர் யாசின், PRO.வாஜீத் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில் பிற கட்சிகளில் இருந்து பல இளைஞர்கள் தங்களை மஜகாவில் இணைத்துக்கொண்டார்கள். இணைப்பு நிகழ்ச்சிக்கு, பின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர் வரும் பிப்ரவரி-15 அன்று கத்தாரில் MKP சார்பில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட மாநாட்டிற்கு தலைப்பு “திருப்புமுனை மாநாடு” என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கத்தார் மண்டல MKP பணிகளை துரிதப்படுத்தி, போர்கால அடிப்படையில் செயல்பட சகோதரர் மீசல் சையத் கனி அவர்களுக்கு மக்கள் தொடர்பு செயலாளராக நியமனம் செய்வது என மண்டல செயலாளர் முன் மொழிந்ததை மண்டல நிர்வாகிகள் அனைவரும் வழிமொழிந்தனர். தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 12.01.2018
ஹார்வேர்ட் பல்கலை கழகத்தின் தமிழ் இருக்கைக்கு மீதி தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும்!
(பகுதி - 3) கடந்த 11.01.2018 அன்று சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது… உலக புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய, தமிழக அரசு பத்து கோடி வழங்கியதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசை தொடர்ந்து உலகமெங்கும் வாழும் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் இதற்கு நிதியை வாரி வழங்கியுள்ளனர். அப்படி இருந்தும் மூன்று முதல் ஐந்து கோடி வரை பற்றாக்குறை எற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொகையையும் தமிழக அரசே செலுத்தினால் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இந்த அரசை பாராட்டுவார்கள். அதுபோல் கீழடி அகழாய்வு என்பது திராவிட கலாச்சாரத்தையும்,தமிழக பண்பாட்டையும் பின்னனியாக கொண்டது. அப்பணி தொடரும் என அமைச்சர் மா.பாண்டியராஜன் கூறியது பாராட்டதக்கது. இவ்வாறு பேசினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்
முகவை மாவட்டத்தில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…
முகவை.ஜன.14., இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது தலைமையில் இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் வழக்கறிஞர் பாம்பன் சீனி அஹமது மரக்கையர் மற்றும் ஜாமில் ஆகியோர் இணைந்தனர். இதில் மாவட்ட பொருளாளர் I. அப்துல் நசீர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் தேவிப்பட்டினம் சுல்தான் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மாவட்டம். 14.01.2018
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..!
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை...) இந்திய நீதித்துறையின் உச்சபட்ச தலைமை பீடத்தில் இருக்கும் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அவர்களுக்கு எதிராக மூத்த அமர்வு நீதிபதிகள் செல்ல மேஷ்வர், ஜோசப் குரியன், ரஞ்சன் கோஜாய் மற்றும் மதன் பி.லோகூர் ஆகிய நால்வரும் கிளார்ந்தெழுந்து நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் உள்ளக் குமுறல்களை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இது நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடந்திராத நிகழ்வு. ஒட்டுமொத்த நீதித்துறையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக ஜனநாயக விரோதமாக நடந்து வருவதை இந்த நால்வரின் பேச்சுக்கள் அம்பலப் படுத்திவுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதியும், தங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதிகளால் இந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டதில்லை. குற்றம் சுமத்தப்பட்டதும் இல்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் எப்போது மக்கள் மன்றத்தின் முடிவுக்காக விடப்பட்டு விட்டதோ அப்போதே தலைமை நீதிபதி தனது நம்பிக்கையை இழந்துவிட்டார். விளிம்பு நிலையில் உள்ள சாதாரண குடிமகன்கூட நீதிக்கான கடைசிப் புகழிடமாக நீதித்துறையையே நம்பி இருக்கிறான். இந்த நிலையில் நீதித்துறையின் உச்சபட்ச ஆதிகாரபீடமே கேள்விக்குறியாகி