சென்னை.அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மத்திய சென்னை மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா துவக்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் மற்றும் அவ்வழியே பேருந்தில் சென்ற பொதுமக்களும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள். ஆர்வமுடன் கலந்துகொண்டு ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை 15.10.17
முகாம்கள்
நாச்சிகுளத்தில் மஜகவின் இரண்டாவது நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
திருவாரூர்.அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையின் மருத்துவ சேவை அணியுடன், நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை, நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை இனைந்து நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜகவின் கிளை செயலாளர் ஜெஹபர் சாதிக் அவர்கள் முன்னிலை வகுத்தார். நாச்சிகுளம் ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு வந்த ஜமாத்தார்கள் அனைவருக்கும் குவைத் பேரவையின் துணை தலைவர் ஜெ.அப்துல் ரஹ்மன் அவர்களும், சமூக ஆர்வலர் நாச்சிகுளம் ரசீது அவர்களும் நிலவேம்பு கசாயம் வழங்கி உபசரித்தனர். இதில் மஜக தொண்டர்களும், ஜமாத்தார்களும் ஆர்வமுடன் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன் பெற்றனர். #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #நாச்சிகுளம்_கிளை 13/10/2017
பரங்கிப்பேட்டையில் மஜகவின் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
கடலூர்.அக்.12., மனிதநேய ஜனநாயக கட்சி கடலூர் மாவட்டம் (தெற்கு) பரங்கிப்பேட்டை கிளை சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று மஜக கிளை செயலாளர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை பொருளாளர், கிளை துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் பரங்கிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிடதக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #பரங்கிப்பேட்டை #கடலூர்_மாவட்டம்_தெற்கு 12.10.17
எடையூர்-சங்கந்தியில் மஜகவின் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!
திருவாரூர்.அக்.11., திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தாலுக்க எடையூர்-சங்கந்தியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடத்திய டெங்கு விழிப்புணர் பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம். மஜக கிளை செயலாளர் தமிம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் தவுலத் பாட்சா, ஹமீது நபில், கலீல் ஜிப்ரான், நாச்சிகுளம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை ஏற்றனர் இம்முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு டெங்கு பற்றிய விழிப்புணர்வு விளக்க பிரச்சாரம் செய்து நிலவேம்பு கசாயம் கொடுத்து முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் சங்கந்தி அரசு பள்ளி மாணவர்களும் கிராம பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அந்த வழியே வாகனத்தில் சென்ற பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஆர்வமாக வந்து நிலவேம்பு கசாயம் அருந்தி சென்றார்கள் என்பது குறிப்பிட தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #எடையூர்_சங்கந்தி #திருவாரூர்_மாவட்டம் 11.10.17
பொதக்குடி மஜக சார்பில் நான்காவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..
திருவாரூர்.அக்.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று நான்காவது நாளாக பொதக்குடி மஜக கிளை அலுவலகத்தில் பொது மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK _IT_WING #திருவாரூர்_மாவட்டம் 11/10/2017