ஜன.21., இன்று தேனி மேற்கு மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு அர்ப்பாட்டத்திற்கு மஜக அலுவலகத்திலிருந்து திரளாக நமது கட்சி தொண்டர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றனர். களத்தில் இருந்த வீரத் தமிழர்கள் அனைவருக்கும் மஜக சார்பாக பிரட் மற்றும் கேக்குகள் தேநீருடன் பரிமாறப்பட்டது ... இதற்கு மாவட்டச் செயலாளர் முகம்மது ரியாஸ் தலைமை வகித்தார் மேலும் நகரச் செயலாளர் அயூப்கான், மாவட்ட நிர்வாகிகள் காதர், அனீஸ் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் அப்துல் கரீம் , தன்வீர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி, தேனி மேற்கு மாவட்டம். 21_01_2017
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் மூலம் சமூக நல்லிணக்கம் !
ஜன.21., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சமூக ஆர்வலர்கள் பொது அறிவிப்பு செய்து ஜல்லிக்கட்டுக்காக போராட அழைப்பு விடுத்ததன் பேரில் (20/1/2017) நேற்று மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவர்களும் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டனர். எப்போதும் கலவர சூழலில் சிக்குன்டு கிடக்கும் முத்துப்பேட்டையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தை நடத்துவதற்கு மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் தனது தனிப்பட்ட பேரிலேயே காவல் துறையிடம் அனுமதி பெற்றிருந்தார். போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை ஆய்வாளர் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால் காலை 10 மணிமுதல் 12 :30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்க முடியும் நீங்கள் ஜும்மா தொழுகைக்கு செல்லுமுன் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார். ஆனால் சமூக நல்லிணக்கத்தோடு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை கண்ட ஆய்வாளர் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் விருப்பத்திற்கேற்ப மாலை 4 மணி வரை அனுமதி வழங்கி ஒத்துழைத்தார். ஆகவே முஸ்லிம்கள் ஜும்மா தொழுகை முடிந்து வந்தும் போராட்டத்தை தொடர்ந்தார்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் முத்துப்பேட்டையில் இதுபோன்ற சமூக நல்லிணக்கம் தொடர்ந்து நீடிக்க
மலேசியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…
ஜன.20., தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பல நாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்திய தூதரகத்துக்கு எதிரே மலேசிய வாழ் தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினார். நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்காக மலேசிய வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை போராட்ட குழுவினர் போராட்டத்தில் பங்கேற்கும் மாறு அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் பங்கேற்ற தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்குள்ள போராட்ட காரர்கள் மத்தியில் உரையாற்றினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். கோலாலம்பூரில் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி கூறினார். பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இப்போராட்டத்தில் மலேசிய இந்தியர் காங்கிரஸின் மத்திய செயற்குழு உறுப்பினர் டத்தோ என்.முனியாண்டி, மலேசிய ஆஸ்ரமம் ஒருங்கிணைப்பு தலைவர் அன்பில் தர்மலிங்கம், பிரபல சமூக ஆர்வர்லர் பாத்திமா சஸ்னா,மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ்,மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) கோலாலம்பூர் நகர செயலாளர் ரஜபுதீன்,செயற்குழு உறுப்பினர் ஜாகிர் பிஸ்ட்ரோ,சமூக ஆர்வலர்கள்
புதுச்சேரியில் 3ஆவது நாளாக மாணவர்களுடன் மஜக…
கோவையில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் தர்ணா போராட்டம் !
ஜன.20., கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் வணிகர் சங்கம்சார்பாக இன்று 20.1.17 காலை 10.00 மணியளவில் பெரியகடைவீதி ஜமேஷா தர்கா முன்பாக ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தர்ணா போராட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாநில கொள்கை விளக்க செயலாளர் கோவை நாசர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், அமீர் அப்பாஸ், ரபீக், பாருக், வணிகர்சங்க பொருப்பாளர்கள் அக்பர், ஹாருண் மற்றும் ஜமேஷா பகுதி நிர்வாகிகள் அப்பாஸ், காஜா மற்றும் நகைகடை வியாரிகள் ஏராலமானோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING) கோவை மாநகர் மாவட்டம். 20.01.17