நாகை. ஜன.06., நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்று 05.01.2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சின்னக்கடை வீதியில் நாகை மாவட்ட #ஜமாத்துல்_உலமா சார்பாக பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மெளலவி #JS_ரிபாய்_ரஷாதி அவர்கள் பங்கேற்று கண்டன பேருரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரகணக்கோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சகத்துல்லாஹ், ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுசாலிஹ், சாகுல் ஹமீது, ஜமீல், மிஸ்பாஹூதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெஹபர் அலி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்,நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
திருச்சி திணறியது…
திருச்சி. ஜன.05., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முதகலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டான் பேருரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ். #நூருல்_ஹக்_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இதில் இனாம் குளத்தூர் அல்ஹாஜ். சாகுல் ஹமீது ஹஜ்ரத் உள்ளிட்ட இமாம்களும், சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார். இதில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருச்சி_மாநகர்_மாவட்டம். 05.01.2018
மஜகவின் சார்பில் மேலப்பாளையத்தில் தடையை மீறி டிச_6 ஆர்ப்பாட்டம்!
நெல்லை.டிச.08., நெல்லை கிழக்கு மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் A.கலீலூர்ரஹ்மான் தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் சில மணிநேரத்திற்க்கு முன்பு ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்று கூரிய காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுத்தனர். அதையடுத்து நிர்வாகிகள் காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடையை மீரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹ்மது அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் வாகித், இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்லை ஹக்கீம், தலைமை நிலைய செயலாளர் அப்துல் காதர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஜாகித் சிக்கி, ஆலியப்பா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் களக்காடு நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போரட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் S.ஷேக் இப்ராஹிம், y.வாஸிம் முபாரக், k.சுபேர், S.நவாப் அலி,T.A.முஹம்மது அலி இக்பால், B.K.மீரான் மைதீன் மூலக்கரைப்பட்டி உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை
திருப்பூரில் மஜக நடத்திய ரயில் நிலைய முற்றுகை போர்!
திருப்பூர்.டிச.08.,மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடத்தப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் டிசம்பர்6 அன்று மாலை சரியாக 3 மணியாளவில் திருப்பூர் இரயில் நிலையம் முன்பு நடைப்பெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் I.ஹைதர்அலி அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது அவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் M.காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் தலைமையகத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை.பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினார். எழுச்சியோடு நடைபெற்ற இப்போராட்டத்தை மாவட்ட துணைச் செயலாளர்கள் S.அக்பர் அலி, Eரஹ்மான், E.ஈஸ்வரன், வெங்கமேடு மீரான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் B.நெளஃபல் ரிஸ்வான், மாணவர் இந்தியா பொருளாளர் A.ஆஷிக் இக்பால், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் A.முஹம்மது அஸ்கர், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் V.கார்த்திக், வர்த்தகர் அணி
தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மஜகவின் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்..!
தூத்துக்குடி.டிச.07., தூத்துக்குடி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாபர் மஸ்ஜீத் வழக்கில் நீதியான தீர்ப்பை விரைந்து வழங்கக்கோரி நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டனஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட பொருலாளர் நவாஸ், மா.து.செயலாளர்கள் காதர்பாட்ஷா, நஜீப், மா.இ.அணி செயலாளர் ராபிக், மா.தொ.அணி செயலாளர் ராசிக் முசம்மில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். தோழமை அமைப்புகளைச் சார்ந்த அகமது இக்பால் (விசிக), சுஜித் (பு.இ.மு) அவர்களும் மஜகவின் அழைப்பை ஏற்று வருகைதந்து தங்கள் கண்டனத்தை பதிவுசெய்தனர். மாலை 3.30 மணிக்கே மழைபெய்ய ஆரம்பித்த சூழ்நிலையிலும் 300க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இருதியாக தூத்துக்குடி நகர இளைஞரணி செயலாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தூத்துக்குடி_மாவட்டம் 06.12.17