ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம்… INDIA கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் பேரா சலாம் பங்கேற்பு….

மார்ச்.27.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சி மாவட்டம் படப்பை அருகில் நடைபெற்றது.

கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பங்கேற்று பேசிய மாநில துணைச்செயலாளர் பேரா.சலாம், ஶ்ரீ பெரம்பத்தூர் வேட்பாளர் திரு. T.R. பாலு, மற்றும் காஞ்சிபும் தொகுதி வேட்பாளர் செல்வம் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு உரையாற்றினார்.

வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் திரு. தாமோ. அன்பரசன், காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, விசிக பாலாஜி MLA., மதிமுக மல்லை.சத்யா, மமக தாம்பரம். யாகூப், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் மஜக மாநில துணைச் செயலாளர் S.M. நாசர், மாநில இளைஞர் அணி செயலாளர் புதுமடம் பைசல், வழக்கறிஞர் அணி செயலாளர் அமீன், துணை செயலாளர் ஸ்வாதிஸ், மாவட்ட செயலாளர் ஜாஹிர், மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#ஸ்ரீபெரும்புதூர்_காஞ்சிபுரம்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
26.03.2024.