ஆளுக்கொரு நீதி… சிறைவாசிகளின் கண்ணீரை கூறும் குறும்படம்…. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பார்வையிட்டு பாராட்டு…

சென்னை.டிச.14., 20 ஆண்டுகளை கடந்தும் தண்டனையை அனுபவித்து, விடுதலையாக வழியின்றி தவிக்கும் சிறைவாசிகளின் துயரம் இப்போது தமிழகத்தில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.

தற்போது ஆலந்தூர் மொய்தீன் இயக்கத்தில், கார்த்திகேயன் மற்றும் ஜப்பார் ஆகியோரின் தயாரிப்பில் ஆளுக்கொரு நீதி என்ற தலைப்பில் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப் படக்குழு மஜக தலைமையகத்திற்கு வருகை தந்து படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்க்க ஏற்பாடு செய்தது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இக்குறும்படத்தை பார்த்து விட்டு, தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

இது வெளியிடப்படும் போது மக்களின் இதயங்களை உருக்கும் என்றும் கூறினார்.

விரைவில் இக்குறும்படம் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பட முன்னோட்ட நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் ஷஃபி, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக் ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
13.12.2021