திருவள்ளூர்.மார்ச்.13., திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதி தியாகி சத்தியமூர்த்தி நகர் 6வது தெரு குறுகிய தெருவென்பதால் நீண்ட நாட்களாக சாலை அமைக்கப்படாமல் இருந்தது. பின்னர் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நாசர் முயற்சியில் முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் செய்யப்பட்டது. தேர்தல், வர்தா புயல், நகராட்சி தேர்தல் தாமதம் என நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இத்தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மாணவர் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று சாலை அமைத்து தந்த அரசு நிர்வாகிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பல... தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் 13.03.2017
மாணவர் இந்தியா
மாணவர் இந்தியா
திண்டுக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA பேட்டி!
திண்டுக்கல் : மார்ச் 12,R.K.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாடுபடும்...! மாணவர்கள் இளைஞர்களின் போராட்டங்கள் எதிர்கால தமிழக அரசியலை தீர்மானிக்கும். வங்ககடலில் இனி ஒரு தமிழக மீனவன் கொல்லப்படுவதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். மத்திய அரசு இவ்விசயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா அம்மா அவர்களின் மறைவு, கலைஞரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை. அதிமுகவை பிளக்க பிஜேபி முயற்சிக்கிறது, திராவிட கட்சிகளை அழிக்க துடிக்கிறது, தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஒருகாலத்திலும் காலூண்ற முடியாது. உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றிப்பெற்றது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பற்ற, சமூகநீதி சக்திகளுக்கு இது தற்காலிக பின்னடைவாகும். மணிப்பூரில் 16 ஆண்டு காலம் அந்த மக்களுக்காக தன்னையே தியாகம் செய்த ஐரோம் ஷர்மிளாவுக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது ஏமாற்றமளிக்கிறது. தியாகத்திற்கு மரியாதை இல்லையோ என தோன்றுகிறது. இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பேட்டியின்போது இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, தலைமை
திண்டுக்கல்லில் மாணவர் இந்தியா விழிப்புணர்வு முகாம்…
திண்டுக்கல்லில் இன்று (12.03.17) மாணவர் இந்தியாவின் சார்பில் 'சமூக நலனில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்' நடைப்பெற்றது. இதில் பொது சேவை, பண்பாடு, தன்னம்பிக்கை, நேர்த்தியான செயல்பாடுகள், மாணவர் சமூகத்தின் வாழ்வியல், பெற்றோரின் கடமைகள், மன அழுத்தங்களை தாண்டி தேர்வில் வெற்றி பெறுதல், என பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுனர்கள் சிறப்பாக வகுப்பெடுத்தனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆராவாரத்திற்கிடையே எழுச்சியுரையாற்றினார். இந்நிகழ்வில் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியை குருவாம்மாள், ஜமால் முகம்மது கல்லூரி பேராசிரியர் பீர்பாஷா, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர் மு.ப. கணேசன், கூடைப்பந்தாட்ட கழகத் தலைவர் யூசுப் அன்சாரி மற்றும் வினோத் ராஜதுறை உள்ளிட்டோர் உரையாற்றினர். மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாவட்ட செயலாளர் ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் இந்தியாவின் தலைமை நிர்வாகிகள் அஸாருதீன், ஜாவீத், பஷீர் அஹமது ஆகியோர் நிகழ்ச்சியை செம்மைப்படுத்தினர். மாணவர் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் முகம்மது பிர்தௌஸ், மரியமனோஜ், சதீஸ் குமார், முனாப்தீன், மோகன் காமாட்சி, உமர் முக்தார், ரபிக் உள்ளிட்டோர்
திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பாக மாணவர், பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம்…
திண்டுக்கல்.மார்ச்.08., திண்டுக்கல் மாவட்டம் #மாணவர்_இந்தியா சார்பாக எதிர் வரும் 12.03.2017 அன்று நடைபெற உள்ள மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கான அழைப்பிதழை கொடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை அலைக்கும் நிகழ்வு நேற்று மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மஜகவின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்களும் சென்றார்கள். சென்ற இடங்களில் மாணவர் இந்தியா அமைப்பினை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெருமையாகவும் மேலும் நன்றாக வளர வாழ்த்துக்களும் தெரிவித்து கொண்டார்கள். இதில் மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மஜக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : ஊடக பிரிவு, மாணவர் இந்தியா திண்டுக்கல் மாவட்டம். 08.02.2017
வெற்றி…! வெற்றி…! எல்லா புகழும் இறைவனுக்கே…
நாளை நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் உருது பாடத்திட்டத்தில் உருது மொழியில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்று பள்ளி கல்வி துறை மறுத்திருந்தன். இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் N.A.தையமிய்யா தலைமையில் மஜக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது, தென் சென்னை மாவட்ட செயலாளர் கபீர் மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸார் தீன் உள்பட மாநில நிர்வாகிகள் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து உருது மொழியில் வினா தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனே அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பேசினர். அதன் விளைவாக தமிழகத்தில் கீழ் வரும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வளத்தூர்(1), பள்ளிகொண்டான்(1), குடியாத்தம்(2), திருப்பத்தூர்(1), ஓசூர்,கிருஷ்ணகிரி(9), விழுப்புரம்(1) ஆகிய அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 905 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு கோரிக்கையை ஏற்று செயல்படுத்தி தந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மாணவர் இந்தியா மற்றும் மஜக சார்பில் நன்றிகள் பல... தகவல் : மாணவர் இந்தியா ஊடக பிரிவு, தலைமையகம் சென்னை. 07.03.2017