(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் அறிக்கை) அதிமுக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு கோப்பில் முதல் கையெழுத்து போட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் பிரதான கோரிக்கையை மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, 2 வது கட்டமாக அமுல்படுத்தியிருப்பது எங்களுக்கு இந்த அரசின் மீது பெருத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. இது தவிர உழைக்கும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சம் 20,000/- ரூபாய் ரொக்கம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இரு மடங்காக உயர்வு. ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதியுதவி 12000/- லிருந்து 18000/- ஆக உயர்வு. மீனவர்களுக்கு 5000 ஆயிரம் வீடுகள் என்பதையும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செய்து அமுல்படுத்தி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு சிறப்பு சேர்க்கும் முகமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முன்முயற்சிகளை மனிநேய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கிறது. இவண், M தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 20.02.17
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
அன்பான நாகை தொகுதி மக்களுக்கு…
(M.தமிமுன் அன்சாரி MLA - வின் விளக்கம்) அன்புக்குரிய நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி சகோதர … , சகோதரிகளே … நீங்கள் நலம்பெற வாழ்த்துக்கள் ! சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து தங்களுடன் கருத்து பரிமாற விரும்புகிறேன் . தங்களின் பேராதரவோடு நான் சட்டமன்ற உறுப்பினராகி, எளிமையான அணுகுமுறைகளோடு , நேர்மையாக பணியாற்றி வருகிறேன் . எமது தோழமை கட்சியான அதிமுகவில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து , யார் முதல்வராக வரவேண்டும் என்ற விவாதம் அரசியலை பரபரப்பாக்கியது. இது குறித்து தொகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என தினமும் நூற்றுக்கணக்கான அலைப்பேசி அழைப்புகள் வந்தன . அதனை மதித்து வேறு யாரும் செய்யத் துணியாத அரிய முயற்சியை , என் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைப்படி முன்னெடுத்தேன் . கருத்துப் பெட்டியை வைத்து கருத்தாய்வை மேற்கொண்டேன் . அனைவருமே பாரட்டினார்கள் . அங்கு 2 ஆயிரம் படிவங்கள் பூர்த்தியாயின . ஆனால் மக்கள் மேலும் திரண்டார்கள் . திரு . நாகராஜன் என்பவர் தலைமையில் சிலர் வந்து “ OPS - க்கு ஆதரவாக போடுங்க “ என கூச்சல் எழுப்பியதால்
ஐயா நல்லக்கண்ணுவுடன் சந்திப்பு…
இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஐயா.நல்லக்கண்ணு அவர்களை நேற்று இரவு அவரது இல்லத்தில் நானும், அவைத்தலைவர் நாசர் உமரீ அவர்களும் சந்தித்தோம். சமீபத்தில் ஐயா அவர்களின் மனைவியார் மரணமடைந்தார். பலமுறை நான் நேரில் சந்தித்து ஆறுதல் கூற முயன்றும் அது முடியாமல் போனது. நேற்று நாங்கள் போனதும், எனது சட்டமன்ற உரைகள் குறித்து பாராட்டியவர் தோழர் மகேந்திரனும், தோழர் லெனினும் என்னைப் பற்றி அடிக்கடி ஐயா அவர்களிடம் பேசுவதாகவும் கூறினார். அவரது அருமை துணைவியார் இழப்பு குறித்து நாங்கள் ஆறுதலாக பேசியப் போது, அந்த பொதுவுடைமை போராளியின் முகத்தில் சோகம் நிழலாடியது. அதைப்பற்றி மேலும் பேசாமல், மணல் கொள்ளை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேசியவர், சட்டமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் இல்லாத குறையை நீங்கள் போக்க வேண்டும் என்றும் பேசினார். ஐயா அவர்கள் மணல் கொள்ளை தொடர்பாக வழக்கறிஞரை சந்திப்பதற்காக புறப்பட்டார். தளராத உணர்வுகள், தடுமாறாத லட்சியங்கள் என ஐயா அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஐயா அவர்களின் காலத்தில் நாம் வாழ்வது ஒரு மகிழ்ச்சியாகும். காமராஜர், காயிதே மில்லத், கக்கன் போன்றவர்களை நாம் பார்த்ததில்லை. ஐயா நல்லக்கண்ணு அவர்கள் மூவரின் வடிவமாக நம்முன்
முதல்வர் பதவியேற்பு நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு…
சென்னை.பிப்.16., முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு மஜக பொதுச் செயலாளர் M.தமிம் அன்சாரி MLA அவர்களுக்கு அதிமுக அவைத் தலைவர் அலைபேசியில் அழைப்பு விடுத்தார். கவர்னர் மாளிகைக்கு வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்களை அவைத் தலைவர் செங்கோட்டையன் அவர்களும், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அவர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 16.02.2017
மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்த்து!
சென்னை.பிப்.16., அதிமுகவின் சார்பில் முதல்வராக பொறுப்பேற்க மாண்புமிகு எடப்பாடி.பழனிச்சாமி அவர்களை மேதகு.ஆளுநர் அவர்கள் அழைப்பு விடுத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. அவர் மாண்புமிகு அம்மா அவர்களின் திட்டங்களை செயல்படுத்தி ,தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. தமிழகத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்கும் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 16_02_17