(மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை) அஇஅதிமுக-வின் பொதுக்குழு கூடி அதன் பொதுச்செயலாளராக சசிகலா அம்மா அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒருமனதாக எடுத்த முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்கு சம்மதம் தெரிவித்த சசிகலா அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின்(MJK) சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 1 1/2 கோடி உறுப்பினர்களை கொண்ட பேரியக்கமாகவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் திகழும் அதிமுக-விற்கு இப்பொதுக்குழு தீர்மான முடிவுகள் மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. மதச்சார்பின்மை, சமூகநீதி, பின்தங்கிய மக்களின் மேம்பாடு ஆகிய களங்களில் அதிமுக தொடர்ந்து பயணிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்தப் பாதையில் சசிகலா அம்மா அவர்கள் சிறப்பாக பயணிக்க மீண்டும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி (MJK). 29/12/2016
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
திட்டச்சேரி ரேஷன் கடையில் நாகை MLA திடீர் ஆய்வு…
டிச.28., நாகை தொகுதிக்கு உட்பட திட்டச்சேரி பேரூராட்சியில் ரேஷன் கடைக்கு சென்று #தமிமுன்_அன்சாரி_MLA திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு நின்றிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ரேஷன் கடையில் கையிருப்பு பொருட்கள் விபரங்களை கேட்டறிந்தார்.அங்குள்ள மக்கள் உளுந்து பற்றாக்குறை இருப்பதாக கூறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக MLA கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 28_12_16
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் நாகை MP, MLA பங்கேற்பு!
மத்திய அரசின் சார்பில் பொறியியல் துறை மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் சிறப்பு திட்ட தொடக்க விழாவில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர்.கோபால், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்துக் கொண்டனர். பொறியியல் கல்வி முடித்த மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப கல்வியறிவை, நடைமுறைப் படுத்துவதற்கான 45 நாட்கள் சிறப்பு பயிற்சியை மத்திய அரசு நடத்தி, அதற்கு சர்வதேச தர சான்றிதழை வழங்குகிறது. தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே அதற்கு தேர்வாகின. அதில் நாகை EGS பிள்ளை பொறியியல் கல்லூரியும் ஒன்று. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது!
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சந்தித்து ஆறுதல்! வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணீஸ், இளைஞரணி செயலாளர் ஷமீம் அகமது ஆகியோரும் உடன் சென்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வர்தா புயலால் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்து அங்கு நேரில் சென்ற பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையிலான மஜக குழு அகதிகள் முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். உடனடியாக கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு குடிநீர் மற்றும் மின்சாரம் ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பிறகு அங்குள்ள மக்களுக்கு மஜக சார்பில் பிரட் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது. அந்த முகாமில் 950 குடும்பங்கள் வசிகின்றன என்பது குறிப்பிடதக்கது. மேலும் புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் நிலை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாகவும் பொதுச்செயலாளர் உறுதியளித்தார். பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக
ஜனவரி-6 யூ.ஏ.யி மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் “சமூக நல்லிணக்க மாநாடு”
இன்ஷா அல்லாஹ்..எதிர்வரும் 2017, ஜனவரி 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் மனிதநேய காலாச்சரப் பேரவை சார்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுபினருமான #M_தமிமுன்_அன்சாரி.MLA அவர்கள் பங்குபெரும்... மாபெரும் "சமூக நல்லிணக்க மாநாடு" அனைத்து சமுதாய மக்களையும் வருக, வருக என அன்புடன் அழைக்கிறது மனிதநேய கலாச்சார பேரவை ஐக்கிய அரபு அமீரகம். தகவக் : ஊடகபிரிவு யூ.ஏ.யி