கோபாலப்பட்டினம் நைனா முகமது படுகொலை சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் குடும்பத்தினரை சந்தித்த பின் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்….

மே.7.,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவருடைய குடும்பத்தாருக்கு அரசு நியாயமான இழப்பீடு வழங்க முயற்சி செய்வதாகவும், நைனா முகமது கொலை வழக்கு எவ்வித குறுக்கீடுகளும், திசை திருப்பும் முயற்சிகளுக்கும் இடமளிக்காமல் சட்டம் தன் கடமையை செய்ய மஜக துணை நிற்கும் என்றும் கூறினார்.

பிறகு அங்கு வருகை தந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்களிடம் பேசியவர் குடும்பத்திற்கு அரசிடம் மனிதாபிமான அடிப்படையில் கருணைத்தொகை பெற்றுத்தர பரிந்துரைக்க வேண்டும் என்றும் இவ்வழக்கு நியாயமான வடிவில் செல்ல ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணை செயலாளர்கள் பேரா. அப்துல் சலாம், கோட்டை ஹாரிஸ், மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட அவைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அரசை சையது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ஹமீது, முகமது யாசின், மாவட்ட கலாச்சார பேரவை செயலாளர் நோக்கியா சாகுல், மாவட்ட அலுவல் செயலாளர் ரியாஸ் அஹமது உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
07.05.2024.