தொகுதி மாற்றம்! முதல்வருக்கு மஜக நன்றி!

மனிதநேய ஜனநாயக கட்சிக்கு அதிமுக கூட்டணியில் நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் தொகுதியை மாற்றி அதற்கு பதிலாக வேறு ஒரு தொகுதியை வழங்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் அம்மா அவர்களுக்கு மஜக சார்பில் கடிதம் கொடுத்து இருந்தோம்.

எங்களின் வேண்டுகோளை அன்புடன் பரிசீலித்த முதல்வர் அவர்கள், இன்று எங்களின் விருப்பப்படி ஒட்டன்சத்திரத்திற்கு பதிலாக வேலூர் தொகுதியை மனிதநேய ஜனநாய கட்சிக்கு வழங்கி இருக்கிறார்கள்.

புதிதாக உருவான மனிதநேய ஜனநாய கட்சியின் மீது தொடர்ந்து அன்பு காட்டிய,எமது ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் டாக்டர் அம்மா அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

ஏற்கனவே செயற்குழுவில் எடுத்த முடிவின் படி,ஒட்டன்சத்திரத்திம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரசித் அவர்கள் வேலூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவார்.

இவண்
M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி

வேலூர் தொகுதி மஜக