நாகை.நவ.22., நாகப்பட்டினத்தில் நாகை வர்த்தக மற்றும் தொழில் குழுமம் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந் நிகழ்வில் நாகையை சேர்ந்த வணிகர்கள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்துக் கொண்டனர். அதில் இதுவரை ஆற்றிய தொகுதி பணிகள் குறித்தும் இனி செய்யப்போகும் செயல் திட்டங்கள் குறித்தும் MLA அவர்கள் விரிவாக பேசினார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கெல்லாம் பதிலளித்து பாராட்டுகளைப் பெற்றார். கோவைக்கு செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகூர் வரை நீட்டிப்பது குறித்தும், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவது குறித்தும் ரயில்வே திட்டப்பணிகளை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால் அவர்களிடம் கலந்து பேசி வருவதாகவும், விரைவில் டெல்லிக்கு சென்று ரயில்வே அமைச்சகத்துடன் பேச விருப்பதாகவும் கூறினார். நாகையின் துறைமுக மேம்பாடு குறித்து அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவர்களோடு இணைந்து முதல்வரிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார். மேலும் நாகையில் பிறந்த மறைமலையடிகளாருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திடம் பேசி தனி தமிழ் ஆராய்ச்சி கூடத்தை அமைக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் தற்போது இல்லாமல் இருப்பதும் அரசியல் நெருக்கடிகளும்
நாகப்பட்டிணம்
நாகை மாவட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும்! மஜக வலியுறுத்தல்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை) நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் நம்பியார் நகர் கிராமங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து கைது செய்திருப்பது மீனவ மக்களிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் குடும்பங்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் பேசி அவர்களை விடுதலை செய்ய துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும், தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அரசியல் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 18.11.17
இது குழந்தைகள் தினம்…! குழந்தைகளுடன் கூடி மகிழ்ந்த நாகை MLA!
நாகை தொகுதிக்குட்பட்ட ப.கொந்தகை என்ற கிராமத்தில் அரசு உதவிப்பெறும் மதாரியா தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அப்பள்ளிக்கு திடிர் வருகை மேற் கொண்டார் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி! தலைமையாசிரியை விமலா மேடம் அவர்களும், ஆசிரியைகளும், பிள்ளைகளும் அவரை வரவேற்றனர். 1914 ல் O.M உசேன் மரைக்காயர் வாப்பா என்பவர் தான் இடம் கொடுத்து இதை உருவாக்கி 50 ஆண்டுகள் நிர்வாகித்திருக்கிறார். இன்று அவரது மகன் சேக் தாவூது என்பவர் வழி நடத்துகிறார். இப்பள்ளிக்கு வயது 104 ஆகிறது. அரசு உதவிப்பெறும் பள்ளியாக இருந்தாலும், அது தனியார் பள்ளிப் போல தரத்துடன் பிள்ளைகளை உருவாக்கி வருகிறது என்பதுதான் அதன் சிறப்பம்சமாகும். அழகான சீருடை, ஷீ, நல்ல கல்வி என தாழ்வு மனநிலை ஏற்படாத வகையில் பிள்ளைகளை ஆசிரியர்கள் பாதுகாக்கிறார்கள். MLA அவர்கள் அந்த மாணவிகளை அழைத்து, தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை வாசிக்க சொன்னார். அந்த பிள்ளைகள் பிழையின்றி வாசித்தனர்கள். பொது அறிவு, அரசியல் ஆகியவற்றையும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து போன்ற ஆங்கில தினசரிகளையும் வாசிக்க வைக்கிறார்கள்! அங்குள்ள பிள்ளைகளிடம் நான் யார் வந்திருக்கேன் தெரியுமா ? என்றதும், நீங்கள்தான்
ஓய்வின்றி மக்கள் சந்திப்புகள்! காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை….. நாகை MLA வின் தொடர் சந்திப்புகள்!
(தொகுப்பு_2) கடந்த 1 மாதமாக டெங்கு பாதிப்புகள், மழை வெள்ள நிவாரணப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகை தொகுதியில் தீவிர சுற்றுப் பயணங்கள் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அவருடன் துறை சார்ந்த அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், மஜக மற்றும் அதிமுக கட்சியினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (13.11. 17) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொகுதியில் உள்ள திருமருகல் ஒன்றியம், நாகை ஒன்றியம் ஆகியவற்றிலுள்ள கிராமங்களுக்கும் நாகை- நாகூர் நகராட்சி பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இதர குறைகளை கேட்டு அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். கட்சி சார்பற்று திமுக, கம்யூனிஸ்ட், த.மா.க, காங்கிரஸ், வி.சி.க, நாம் தமிழர், உள்ளிட்ட பிற கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்து அவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் MLA அவர்களை சந்தித்து தொகுதி நலன் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். நேற்று தொடர்ந்து ஓய்வின்றி காலை முதல் இரவு லரை 11 மணி நேரம் மக்களை சந்தித்து மழை நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது
நாகை விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் தமிமுன் அன்சாரி MLA!
(தொகுப்பு 1) இன்று (13.11.17) நாகை தொகுதியில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பொதுமக்களிடம் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்தும், இதர குறைகள் குறித்தும் விசாரித்து அறிந்தார். நரிமணத்தில் வயலில் இறங்கி அங்கு வேலை செய்யும் விவசாய கூலி வேலை செய்யும் பெண்களிடம் அவர்களின் தேவைகளை விசாரித்தார். பயீர் காப்பீட்டுத் தொகையை விரைவில் பெற்று தருமாறும், விவசாய தொழிலாளர்களுக்கும் இழப்பீடுகள் கிடைக்க ஆவணம் செய்யுமாறும், மழை கால பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறும் வைத்த கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக MLA கூறினார். அதுபோல குத்தாலம் அருகே விவசாய பெண்களை சந்தித்து, அவர்களின் குடிநீர் தேவைகளை விரைந்து நிறைவேற்றி தருவதாகவும் கூறினார். அதுபோல எரவாஞ்சேரிக்கும் சென்று விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இச்சந்திப்பில் MLA அவர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன், நாகை முபாரக், திட்டசேரி செய்யது ரியாசுதீன், ஏனங்குடி யூசுப்தீன், பிஸ்மி யூசுப், திருநாவுக்கரசு, ஆறுமுகபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 13.11.17