மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! என்னுடைய தொகுதி கோரிக்கைகளுக்கு நான் நேரிடையாக வர விரும்புகின்றேன். என்னுடைய நாகப்பட்டினம் தொகுதிக்கு அருகிலே, புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் அமைந்திருக்கிறது. நாகூருக்கும், காரைக்காலுக்கும் இடையிலே MARG என்ற தனியார் நிறுவனத்தின் துறைமுகம் இருக்கிறது. அந்த தனியார் துறைமுகத்திற்கு இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றபோது, சுட்டிகாட்டப்பட்ட எந்த விதிகளையும் அந்த MARG தனியார் துறைமுக நிறுவனம் பின்பற்றவில்லை, அதனால் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகின்றபோது, தூசிகள் எழுந்து நாகூர், பட்டினச்சேரி, மேலவாஞ்சூர் போன்ற பகுதிகளில் வாழக்கூடிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. காலையில் கொடிகளிலே துணிகளை காயவைத்தால் மாலை வந்து பார்க்கின்றபோது, அந்த துணிகள் கறுப்பாக இருக்கின்றன. செருப்பில்லாமல் நடந்து சென்றால் கால்கள் கருப்பாகி விடுகின்றன. தோல் நோய்கள் ஏற்படுகின்றன; நுரையீரல் சுவாசக்கோளாறுகள் ஏற்படுகின்றன. பல சமூக சிக்கல்களிலே நாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றனர். நாகூருக்கு சுற்றுலா வரக்கூடிய மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கிய இந்த அரசு, இந்த விஷயத்திலே கவனம் செலுத்தி புதுச்சேரி அரசுடன் பேசவேண்டும்.
Author: admin
காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாள் “மாணவர் இந்தியா” ஒருங்கிணைத்த கருத்தரங்கம்…
ஜனவரி 30 தேச தந்தை மகாத்மா காந்தி படுகொலை "பயங்கரவாத எதிர்ப்பு நாள்" என்ற தலைப்பில் #மாணவர்_இந்தியா ஒருங்கிணைத்த கருத்தரங்கம் 30-01-2017 இன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில் மாநில செயலாளர் அசாருத்தீன்.MBA., தலைமையில் நடைபெற்றது. மாநில பொருளாளர் ஜாவித்.MBA., வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர் இந்தியா மாநில துணை செயலாளர் அப்ஸர் சையத்.MBA., தீர்மானங்களின் மீதான உரையை வழங்க, மஜக மாநில பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி.MLA., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் #சரத்குமார்.Ex.MLA., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராசிரியர் #அருணன், காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் #ஜோதிமணி, மஜக மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். இறுதியாக மாநில துணை செயலாளர் பஷீர் அஹமது. MBA., நன்றிகூறினார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, சென்னை. 30.01.17
சட்டமன்றத்தில் இன்று : மெரினா போராட்டத்தில் ஒஸாமா படத்தை யாரும் காட்டவில்லை!
மெரினா போராட்டத்தில் ஒஸாமா படத்தை யாரும் காட்டவில்லை! மாணவர் போராட்டத்தை தைப்புரட்சி என்றும் தமிழர்களின் வசந்த காலம் என்றும் வாழ்த்து! சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அதிரடி விளக்கம் ! இன்று சட்டமன்றத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA தமிழக முதல்வரின் கவனத்திற்கு சில விளக்கங்களை கொடுத்தார். மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் ஒஸாமா பின் லேடன் படத்தை காட்டியதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் OPS அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார். இன்று (30/1/2017) சட்டமன்றத்தில் அது குறித்து பேசிய மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஒஸாமா பின்லேடன் படத்தை மெரினா மாணவர் போராட்ட களத்தில் யாரும் காட்டவில்லை. சென்னையில் ஒரு சாலையில் சென்ற பைக்கில் அந்த படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப்படத்தைத் தான் அதிகாரிகள் முதல்வரிடம் கொடுத்திருக்கின்றார்கள் என்றார். மாணவர் போராட்டதிற்க்கும் அந்த படத்திற்க்கும் சம்பந்தமில்லை என்று விளக்கி அவையை பரபரப்பில் ஆழ்த்தினார். உடனே முதல்வர் திரு OPS அவர்கள் எழுந்து அதுகுறித்து விசாரிக்க சொல்லியிருப்பதாகவும், விசாரனை அறிக்கையில் அது தெரிய வரும் என்றும், தான் எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் பதிலளித்தார்.
திகைத்துப்போன மருத்துவக் குழுவினர்- மாணவர் இந்தியா அதிரடி…
ஜன.29., ஈரோடு மேற்கு மாவட்ட "மாணவர் இந்தியா" சார்பாக சத்தியமங்கலத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில மஜக மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் எதிர்பாராத வகையில் அந்த பகுதி மாணவர்கள் மிக ஆர்வமாக கலந்துக் கொண்டு இரத்ததானம் வழங்கினர். மஜக துணைப் பொதுச்செயலாளர் ஈரோடு ஃபாருக் சிறப்புரையாற்றினார். நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்து மருத்துவ குழுவினை திகைப்பில் ஆற்றினர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுகளை வழங்கிய மருத்துவக்குழு தலைவர் தொடர்ந்து இதுபோன்ற சேவை பணிகளை செய்ய வலியுறுத்தினார். இறுதியாக மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரை வழங்கினார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, ஈரோடு மேற்கு 29.01.17
காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழா!
ஜன.29., காங்கிரஸ் பிரமுகர் சித்திக் மகன் நவாஸ் அவர்களின் திருமண நிகழ்வு சேலத்தில் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி தங்கபாலு, மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரமணி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு MLA, காங்கிரஸ் பிரமுகர் விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) சேலம் 29.01.17