திகைத்துப்போன மருத்துவக் குழுவினர்- மாணவர் இந்தியா அதிரடி…

image

image

ஜன.29., ஈரோடு மேற்கு மாவட்ட “மாணவர் இந்தியா” சார்பாக சத்தியமங்கலத்தில் இரத்ததான முகாம் நடைப்பெற்றது.

இதில மஜக மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மருத்துவர்கள் எதிர்பாராத வகையில் அந்த பகுதி மாணவர்கள் மிக ஆர்வமாக கலந்துக் கொண்டு இரத்ததானம் வழங்கினர். மஜக துணைப் பொதுச்செயலாளர் ஈரோடு ஃபாருக்  சிறப்புரையாற்றினார்.

நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இரத்ததானம் செய்து மருத்துவ குழுவினை திகைப்பில் ஆற்றினர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுகளை வழங்கிய மருத்துவக்குழு தலைவர் தொடர்ந்து இதுபோன்ற சேவை பணிகளை செய்ய வலியுறுத்தினார்.  இறுதியாக மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றியுரை வழங்கினார்.

தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, ஈரோடு மேற்கு
29.01.17