பிப்.02., நேற்று தமிழக சட்டசபைக்கு வந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவைக்கு நுழைவதற்கு முன்பு "2017, பிப்ரவரி 1 முதல் கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன். வணிகச் சங்கங்களின் கோரிக்கை வெல்லட்டும்" என்ற பதாகையோடு வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டம் நடத்தியப்போது பெப்சி, கோக் பானங்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டார்கள். அதன் விளைவாக மார்ச் 1 முதல் வணிகர் சங்கங்கள் இனி பெப்சி, கோக் விற்கக்கூடாது என வணிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். அதை ஆதரிக்கும் விதமாக, இன்று எனது நிலைபாட்டை தெரிவித்தேன் என்று கூறினார். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT Wing)
Author: admin
உங்களின் கரங்களை பிடித்து கொண்டு, கண்ணீரோடு அழுவதாக எடுத்துக்கொள்ளுங்கள்!
#சிறைவாசிகள்_விடுதலை #குறித்து #மஜக_பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA #சட்டசபையில் #உருக்கமாக #வேண்டுகோள்! மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பெரும் மரியாதைக்குரிய பொன்மனச் செம்மல் ஐயா எம்.ஜி.ஆர். அவர்களுடைய நூற்றாண்டு விழாக் காலம் இது. தமிழக அரசு சிறப்பான முறையிலே இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலே மிகுந்த தாழ்மையோடு ஒரு கோரிக்கையை இந்த அவையிலே முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். எனக்கு முன்பாக அண்ணன் திரு.தனியரசு, சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத அரசியல் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அந்தக் கருத்தை நான் ஏற்கனவே இந்த அவையிலே தெளிவாக வலியுறுத்தியிருக்கின்றேன். நான் அதை மீண்டும் இப்போது வலியுறுத்துகின்றேன். மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் தலைமையில் இந்தப் புதிய அவை அமைந்த பிறகு, வெற்றிபெற்ற பிறகு, நான்கு முறை நான் அவர்களை சந்தித்திருக்கின்றேன். அதிலே, இரண்டு முறை 14 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென்று நான் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன். நிச்சயமாக பரிசீலிப்பதாக சொன்னார்கள். கடைசியாக, அவர்கள் இந்த அவையிலே பேசிவிட்டு சென்ற பிறகு,
E.அஹ்மத் சாஹிப் மரணம்…
#தமிழக_மீனவர்களின்_நலனுக்காக_பாடுபட்டாவர்! (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் செய்தி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான E.அஹ்மத் சாஹிப் அவர்கள் இன்று அதிகாலை மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்திற்குரியது. கேரளாவின் செல்வாக்கு பெற்ற தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த E.அஹ்மத் அவர்கள், சிறுபான்மை மக்களின் வலிமை மிக்க குரலாய் நாடாளுமன்றத்தில் திகழ்ந்தார். கேரள மக்களின் தேசிய குரலாகவும், பன்னாட்டு அறிவுமிக்க தலைவராகவும் அவர் விளங்கினார். கேரளாவில் 1967 முதல் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் பணியாற்றியதோடு, பல்வேறு வாரியங்களுக்கு தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 1991 முதல் தற்போது வரை தொடர்ந்து 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் வெளியுறவுத் துறையிலும், ரயில்வே துறையிலும் இணை அமைச்சராகவும் செயல்பட்டார். இந்தியவின் சார்பில் 6 முறை ஐ.நா.வின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை இந்திய ஹஜ் கமிட்டியிலும் பொறுப்பு வகித்துள்ளார். அவர் வெளியுறவுத்துறையில் இணை அமைச்சராக இருந்தப் போது, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட போதெல்லாம் அதில் தலையிட்டு, தமிழக மீனவர்களை மீட்டெடுக்க அரும்பாடுபட்டார். தமிழக தலைவர்களோடு
உடல் நல குறைவால் மூ லீக் தலைவர் இ.அஹமது அவர்கள் மருத்துவமனையில் அனுமதி
பிப்.01., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும், முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினருமான #இ_அஹமது_MP அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறோம். --- தமிமுன்_அன்சாரி_MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 01-02-2017 ✍மஜக தகவல் தொழில்நுட்ப அணி (〽JK IT-WING) தலைமையகம்.
மாணவர்களின் போராட்டம் தமிழர்களின் வசந்த காலம்!
சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை! (நேற்றைய சட்டமன்ற உரையின் முக்கிய பகுதி) ஜல்லிகட்டுக்காக நம்முடைய மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய ஒரு சிறப்பான போராட்டத்தை நான் மனதார வரவேற்று பாராட்டுகிறேன். அவர்கள் நடத்திய போராட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஒரு சிறப்பான சட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு நிறைவேற்றக்கூடிய ஒரு வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியலை ஒதுக்கி, பொதுவாழ்வின் மீது அக்கறையில்லாமல் விலகிக்கொண்டிருந்த ஒரு புதிய தலைமுறையினர் பொதுவாழ்வுக்கு வந்திருக்கின்றனர், அரசியலுக்கு வந்திருக்கின்றனர். துனிசிய புரட்சியை, எகிப்து புரட்சியை அரபு வசந்தம் என்று வர்ணித்தார்கள். அதுபோன்று நம்முடைய மாணவர்களும், இளைஞர்களும் நம்முடைய இனம் காக்க, மொழி காக்க, மாநிலத்தின் உரிமைகளைக் காக்க நடத்திய இந்தப் போராட்டத்தை நான் 'தை புரட்சி' என்று வாழ்த்துகின்றேன். இது தமிழர்களுடைய வசந்த காலம் என்று வாழ்த்துகின்றேன். அந்தப் போராட்டத்திலே ஒழுங்குகள் இருந்தன. என்னவென்று சொன்னால், நடிகை நயன்தாரா வந்தார், எந்தவொரு மாணவரும் அங்கே நயன்தாராவுடன் செல்பி எடுக்கவில்லை. இது அந்த போரட்டத்தினுடைய ஒரு சிறப்பாக நான் கருதுகிறேன். அங்கே நடிகர்கள் வந்தார்கள், நடிகர்களோடு போட்டிப்போட்டு கொண்டு யாரும் செல்பி எடுக்கவில்லை. அப்படிபட்ட ஒழுக்கம் அந்தப் போராட்டத்திலே இருந்தது.