பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் மஜக நிர்வாகிகள் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் அவர்களை நேரில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது மேலப்பாளையம் பாளையன் கால்வாயை தூர்வாரி மழைகாலத்திற்கு முன் தயார் நிலையில் வைத்திடவும்,

புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கபடும் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பேருந்துக்களில் இரண்டு நேரபேருந்துக்களை பெருமாள்புரம், தியாகராஜநகர், இராஜகோபாலபுரம் மார்கமாக இயக்க வலியுறுத்தியும்,

ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை சட்டமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது மாவட்ட துணை செயலாளர்கள் N.அப்பாஸ், அஸ்ரப் அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் பேசர் அலி, சம்சுதீன் மேலப்பாளையம் பகுதி நிர்வாகிகள் ஆசிக் ரகுமான், சேக் பீர் முகம்மது, ரசாக், தமிம் அன்சாரி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.