மஜக மாநில பொருளாளர் வேலூர் வருகை பொது மக்கள் உற்சாக வரவேற்பு..! நீர் மோர் பந்தல் திறப்பு கொடி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை..!!

வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் .

#நிகழ்வு_1

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார்.

அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார்.

#நிகழ்வு_2

கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக,

வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார்.

இதில் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அனைவருக்கும் நீர் , மோர் மற்றும் தர்பூசினி பழங்கள் வழங்கப்பட்டது.,

#நிகழ்வு_3

மூன்றாம் கட்டமாக 20 க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் AIMIM – கட்சியிலிருந்து விலகி தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர். அதோடு அவர்கள் மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் வேலூர் முழுக்க மக்களை சந்தித்து சேவை அரசியலில் பல்வேறு உறுப்பினர்களை நாங்கள் சேர்ப்போம் என்று நெகிழ்வுடன் அவர்கள் கூறினர்.

இறுதியாக,

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் வேலூர் மாவட்ட தலைவர் திரு.சரவணன் அவர்கள் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் SG.அப்சர் சையத் அவர்களை சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பணியை வெகுவாக பாரட்டியதுடன், மஜக-வினர் ஒருவருக்கொருவர் மதிப்புடனும், தோழமையுடனும் மக்களிடம் தம்முடைய அன்புச் செயல்களாலும், சேவைகளாலும் செயல்படுவதால் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும், மஜகவின் சேவை அரசியலில் தனக்கும் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதால், பொது மக்களை சந்தித்து சேவை அரசியலான மனிதநேய ஜனநாயக கட்சியில் இணையுமாறும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் மிகவும் நெகிழ்வுடன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யாசின் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சையத் உசேன் மற்றும் ஜாஹிர் உசேன் அவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், மருத்துவ சேவை அணி செயலாளர் சையது காதர், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சாதிக், மண்டல செயலாளர் முஹம்மத் பாயிஸ், பொருளாளர் ஷேக் இம்ரான், துணை செயலாளர்கள் அஸ்கர் அலி, ஆசிப் அப்ரோஸ், ரிஸ்வான், சையத் கலீம், 30வது கிளை செயலாளர் மாலிக், துணை செயலாளர் அமனுல்லா, 31வது கிளை செயலாளர் முஹம்மத் இஸ்மாயில், பொருளாளர் சையத் ரவ்னாக், துணை செயலாளர்கள் முஜீர், முபாரக், முஜாயத், சையத் ரபி, இம்ரான், சல்மான், ஜாபர், அப்பாஸ், மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
10.05.2018