ஏப்ரல் 02, இன்று நாகை தொகுதியில், மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டார். காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை சந்தித்து கொரனா முன் எச்சரிக்கை பணிகள் குறித்து கேட்டறிந்தார். முதலில் திட்டச்சேரியில் ஆய்வை மேற்கொண்டார். அங்கு கிசிச்சைக்கு வந்தவர்களிடமும் உரையாடினார். பிறகு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஏனங்குடி, திருக்கண்ணபுரம், கணபதிபுரம், திருப்பயத்தாங்குடி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சென்று டாக்டர் மற்றும் செவிலியர்களை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். தற்போது அவர்களின் பணிகள் மக்களால் போற்றப்படுகிறது என்றும் பாராட்டினார். மருத்துவ தேவைகள் எதுவாயினும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். இன்று திருமருகல் தாலுகா, திட்டச்சேரி பேருராட்சியிலும் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கும் அவர் வருகை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அங்கு சந்தித்தவர்களிடம் சமுக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க கேட்டுக்கொண்டார். அவருடன் ஒன்றிய பெருந்தலைவர் ராதா, திட்டச்சேரி ரியாஸ், முன்ஷி, நியாஸ், முபீன் ஆகியோரும் உடன் சென்றனர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர்
Tag: M.தமிமுன் அன்சாரி
மேலாப்பாளையம் திண்டுக்கல் பேகம்பூர் நிலவரம்.! உயர்அதிகாரிகளிடம் மஜக பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி MLA பேச்சு.!!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் ஆகிய ஊர்களை கொரோனா வலையத்தில் சுகாதாரத்துறை வைத்திருப்பதாக செய்திகள் வருகிறது. அங்கு மருத்துவம் மற்றும் அத்தியாவாசிய தேவைகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுவதாக புகார்கள் மஜக-வுக்கு வந்தது. மேலப்பாளையத்தில் அத்தியாவசிய தொடர்புகள் கிடைக்காமல் தனிமைப்படுத்திருப்பதாக மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாய் அவர்கள் தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அதுபோல் திண்டுக்கலிருந்தும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததோடு காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் பேசினார். இப்பகுதிகளில் மருத்துவ சேவைகளும், அத்தியாவசிய பணிகளும் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING 02/04/2020
கொரோனாநோய் எதிர்ப்புசக்திக்காக கபசுர குடிநீர்! மஜக சார்பில் தயாரித்து விதிமுறைகளை பேணி விநியோகம்!
ஏப்.02, நாகை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திட்டச்சேரி பேரூர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீரை தயாரித்து முதற்கட்டமாக அங்காடி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்ற மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இக்குடிநீரானது, கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைகாக நோய் தாக்காத நபர்கள் கபசுர குடிநீரை பயன்படுத்திட தமிழக அரசின் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுரையை ஏற்று அரசு மருத்துவமனைகளில் இயங்கும் சித்த மருத்துவ பிரிவின் சார்பில் இக்குடிநீர் மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சமூக விலகலை கடைப்பிடித்து கூட்டம் சேராமல் விநியோகம் செய்யும் பணி திட்டச்சேரி பேரூர் பொருளாளர் முகம்மது சதாம் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம். 02.04.2020
டெல்லி சென்றவர்கள் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வது அவசியம் : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!
இத்தருணத்தில்வெறுப்புஅரசியலைதூண்டுவதுகண்டிக்கத்தக்கது! ஆன்மிக பணிக்காக டெல்லிக்கு சென்ற தப்லீக் ஜமாத்தினர் வெளிநாட்டவர்களால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களில் தமிழகம் திரும்பியவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். பலர் அந்தந்த ஊர் ஜமாத்தினர், குடும்பத்தினரின் ஆலோசனையின் படி, அதிகாரிகளின் வழிகாட்டலை ஏற்று மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள். இதையும் கடந்து யாரேனும் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளும்படி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். நாட்டின் சூழல்,பொது மக்களின் உயிர் பாதுகாப்பு, தங்கள் குடும்பத்தினர் நலம் ஆகியவை இதில் அடங்கியிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சுட்டிக் காட்டுகிறோம். https://m.facebook.com/story.php?story_fbid=2367172930049135&id=700424783390633 அதே சமயம், பொது சமூகத்திற்கு சில விசயங்களை விளக்க கடமைப்பட்டுள்ளோம். அதில் முதலாவது இவ்விசயத்தில் வரம்பு மீறிய விமர்சனங்களை சிலர் பரப்புவது நியாமற்றது என்பதாகும். தப்லீக் ஜமாத் என்பது அரசியல், சமுதாய சேவை ஆகியவற்றில் ஆர்வம் காட்டாத ஒரு ஆன்மீக அமைப்பாகும். அவர்கள் "ஐந்து வேளை இறைவனை தொழ வேண்டும்." என்ற ஒற்றை கொள்கையை முஸ்லிம்களிடம் மட்டும் பரப்புரை செய்பவர்கள். வேறு எதையும் இவர்கள் செய்வதில்லை என்பதும், சொந்த பணத்தில் இவர்கள்
கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழங்கள் வழங்கிய மஜகவினர்!!
கோவை: ஏப். 01., கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்கள் மற்றும் சாலையோர பொதுமக்கள், மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டது. பழங்களை பெற்றுக்கொண்ட காவல் துறையினர், மற்றும் பொதுமக்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 01.04.2020