ஏப்ரல் 10, நாகை ஒன்றியத்தில், தேமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார். கொரணா தொடர்பான முன் எச்சரிக்கை பணிகள் குறித்து டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். அவர்களின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் SG கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2384215638344864&id=700424783390633
Tag: M.தமிமுன் அன்சாரி
நாகை அம்மா உணவகத்தில், முதமிமுன்அன்சாரி MLA ஆய்வு!
ஏப்ரல் 09, இன்று நாகையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி ஆணையர் ஏகராஜ் அவர்களும் உடன் வந்தார். அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை சாப்பிட்டு பார்த்தார். பிறகு சமையலறை பகுதியின் தூய்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பிறகு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்திற்கும் சென்று அங்கு சமைக்கப்பட்ட தயிர் சாதம் , சாம்பார், சோறு ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். இது தவிர தினமும் நகராட்சி சார்பில் யாசகர்கள், வறியவர்கள், தேவையுடையவர்கள் என 380 பேருக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்படுவது குறித்து கமிஷனரிடம் கேட்டறிந்தார். நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்தும் கமிஷனர் அவர்கள் MLA விடம் விளக்கினார். வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களும் வினியோகிக்கப்படுவது குறித்தும் MLA அவர்கள் விசாரித்தறிந்தார். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2382536338512794&id=700424783390633
நாகைதொகுதி பொரவச்சேரியில் நடமாடும் ரேஷன்கடை : முதமிமுன்அன்சாரிMLAநேரில்_ஆய்வு!
ஏப்.09, இன்று நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட நாகை ஒன்றியத்தில் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். புத்தூர், மஞ்சக்கொல்லை, சிக்கல், பொரவச்சேரி, தேமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். பொரவச்சேரியில் நடமாடும் ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட கவுன்சிலர் SG கணேசன், ஊராட்சி செயல் அலுவலர் சாக்ரடிஸ் ஆகியோரும் உடன் சென்றனர். அங்கு ரேஷன் கடையில் ஒருவர் பின் ஒருவராக மைக் மூலம் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, வரிசையாக வந்து பொருட்களை மக்கள் பெற்று சென்றனர். பிறகு பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு சென்றவர். அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பரிசோதனை முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். அங்கு குடிநீர், காய்கறிகள், மளிகை பொருட்கள் விநியோகம் குறித்தும் ஊர் பெரியவர்களிடம் விசாரித்தார். பிறகு அதிகாரிகளிடம் அது பற்றி கூறி, உரிய கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். அங்கு பணியில் இருந்த காவல் துறையினரை சந்தித்து அவர்களை பாராட்டினார். அங்கு வந்த மஜக ஒன்றிய செயலாளர் ஜலாலிடம், கடமையில் ஈடுபடும் காவலர்கள், சுகாதாரத் துறையினருக்கு மோர், இளநீர், நுங்கு ஆகியவற்றை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். தகவல், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். https://m.facebook.com/story.php?story_fbid=2383198338446594&id=700424783390633
உயிர்காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்.! முதமிமுன்அன்சாரி MLA மத்தியஅரசுக்கு வலியுறுத்தல்.!!
கொரோனா வைரஸ் நோயை ஒழிக்கும் பணியை இந்தியாவெங்கும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துவரும் நிலையில், முக்கிய உயிர் காக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது நல்லதல்ல. மனிதாபிமானம் எல்லையற்றது என்பது உண்மை. அதே சமயம் நமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகே, பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. நமது நாடு உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு அதிக அளவில் கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், குறைந்தபட்சம் ஏப்ரல் மாதம் இறுதி வரையிலாவது இது போன்ற உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க கூடாது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டல் தொணியிலான வேண்டுகோளுக்கு உடனடியாக பணிந்து, உயிர் காக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்பது நம் நாட்டின் நலன் சார்ந்த அரசியலுக்கு நல்லதல்ல. நம் நாட்டின் மக்கள் தொகை அளவுக்கேற்ப, இது போன்ற மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியமாகும். மத்திய அரசு நம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA #பொதுச்_செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 07.04.2020
மஜக சார்பில் கபசுரகுடி நீர்தயாரிப்பு, நேரில்பார்வையிட்டார் மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA…
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கபசுர குடிநீர் தயாரிக்கும் பணிகளை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நேரில் பார்வையிட்டார். கபசுர குடிநீரில் வெற்றிலை, எலுமிச்சை, சுக்கு, திப்பிலி உள்ளிட்ட சித்த மருந்து வேர்கள் களந்து தரமான முறையில் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு மஜக வினருக்கு பாராட்டு தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறு தயாரித்து ஜந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று விநியோகிக்கப்படுகிறது. இரண்டு இரண்டு நபர்களாக வீடுதோறும் செல்வது பலராலும் பாராட்டப்படுகிறது. தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 02.04.2020