நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சிவகங்கை மாவட்டம், இளையாகுடியில் மஜக மாநில துணை செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் அவர்கள் தேசிய கொடியேற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #சிவகங்கை_மாவட்டம் 15.08.2021
Tag: MJK Party
75வது சுதந்திர தினவிழா! கூடலூரில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றம்!
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் S.தமீமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் V.ஜோசப், அவர்கள் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் நகர பொருளாளர் மஜீத், மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 15.08.2021
75வது சுதந்திர தின விழா! உதகையில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றம்!
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்டம் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் T.கமாலுதீன்,தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ராணுவ அதிகாரி அவிழ்த்தார் குருசாமி, அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாணவர் இந்திய மாநில செயலாளர் பெரியார் கார்த்திக், மாவட்ட பொருளாளர் என் .காலிப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் தப்ரேஸ், மாவட்ட துணைச் செயலாளர் அதிப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 15.8.2021
75வது சுதந்திர தினவிழா.! மஜக மத்தியசென்னை கிழக்கு மாவட்டத்தில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள்..!
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் புரசைவாக்கம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய இடங்களில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மஜக மாநில செயலாளர் சீனி முஹம்மது அவர்களும், புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச் செயலாளர்கள் காஜா மொய்தீன், ரவூப் ரஹிம் மேலும் TM.யூசுப் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மத்தியசென்னை_கிழக்கு 15.08.2021
75வது சுதந்திர தின விழா! மேட்டுப்பாளையத்தில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்!
இந்திய தேசத்தின் 75,வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் M.சுல்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முகமது அப்பாஸ் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும், இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் A.முஹம்மது நிவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.காஜாமைதீன், R.யாசர் அரபாத், A.ஷேக் மைதீன், SMR பாரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் M.ஆரிஃப் அப்பாஸ், மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் M.காஜா மைதீன், மனித உரிமைகள் அணி மாவட்ட செயலாளர் மகேந்திரன், மற்றும் நிர்வாகிகள் அஜீஸ், அசார், S.முஹம்மது ரபீக், ரமீஜ் ராஜா, இம்தியாஸ், இம்ரான், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_வடக்கு_மாவட்டம் 15.08.2021