75வது சுதந்திர தினவிழா.! மஜக மத்தியசென்னை கிழக்கு மாவட்டத்தில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள்..!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் புரசைவாக்கம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய இடங்களில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மஜக மாநில செயலாளர் சீனி முஹம்மது அவர்களும், புரசைவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் மீனவர் அணி மாநில செயலாளர் பார்த்திபன் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட துணைச் செயலாளர்கள் காஜா மொய்தீன், ரவூப் ரஹிம் மேலும் TM.யூசுப் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்தியசென்னை_கிழக்கு
15.08.2021