நீலகிரி:மார்ச்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தமிமுன்அன்சாரி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியாவின் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர், அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாக விரிவாக்கம், உறுப்பினர் சேர்க்கை, போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் ஜோசப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நீலகிரிமேற்குமாவட்டம்
Tag: புதிய குடியுரிமை சட்டத்தை
MKP அமீரக பொதுக் குழு கூட்டம்..
அமீரகம்.மார்ச்.09., #மனிதநேயகலாச்சாரபேரவை அமீரக பொதுக்குழு கூட்டம் அமீரக IT Wing செயலாளர் Y.M.ஜியாவுல் ஹக் அவர்கள் இல்லத்தில் அமீரக மண்டல செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையிலும் , அமீரக பொருளாலர் H.அபுல் ஹசன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அமீரக துணை செயலாளர் A.அசாலி அஹமது அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத கருப்பு சட்டங்களான NRC,NPR,CAA உள்ளிட்ட குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், மாணவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், பொது மக்களுக்கும் அமீரக மனிதநேய கலாச்சார பேரவை தனது முழு ஆதரவினையும், புரட்சிக்கர வாழ்த்துக்களையும் தெரிவித்தல், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமீரக செயலாளராக திறம்பட பணியாற்றிய சகோதரர்.மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. இறுதியாக துபை மாநகர செயலாளர் V.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின் நன்றியுரையோடு பொதுக்குழு நிறைவுற்றது. குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கடந்த பிப்ரவரி 29 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், கோவையில் லட்சக்கணக்காண மக்களை திரட்டி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிவு ஜீவிகளையும், மாணவர்
நன்னிலத்தில் நடைப் பெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில், மஜக மாநில செயலாளர் நாச்சிக் குளம் தாஜூ தீன்பங்கேற்று கண்டன உரை!
மார்ச்.09, திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஜமாத் கூட்டமைப்பு ஏற்பாட்டில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. இப் பொதுக்கூட்டத்தில் மஜக சார்பில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். மாப்பிள்ளை குப்பம் பள்ளிவாசல் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி நன்னிலம் வடக்கு தெருவில் அமைந்திருந்த பொதுக்கூட்ட மேடை வரை மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. தொடர்ந்து நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள் என திரளானோர் பஙகேற்றனர். இதில், மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லாஹ் மற்றும் நாகை தெற்கு திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மஜகவினரும் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 08/03/2020
நாகையில் தொடங்கிய தர்ணா போராட்டத்தில் மஜக பங்கேற்பு!
மார்ச்.09, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் இன்று காலை முதல் தொடங்கியது. மஜக சார்பில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்டச் செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் ஆகியோர் பங்கேற்று கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதில், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். இன்று தொடங்கிய போராட்டம் எதிர்வரும் 13 தேதி வரை நடைப்பெறுகிறது. இதில் இன்று மாலை மஜக கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் அய்யம்பேட்டை காதர் பாட்சாவும் மற்ற தினங்களில் மாநில நிர்வாகிகளும் தொடர்ச்சியாக பங்கேற்று கண்டன உரை நிகழ்த்த உள்ளனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
டெல்லி கலவரம்! கோயிலை முஸ்லிம்களும் முஸ்லிம்களை இந்துக்களும் காத்துள்ளனர்..! துளசேந்திர புரத்தில்முதமி முன் அன்சாரி MLA பேச்சு!
மார்ச் 09, நாகை மாவட்டம் துளசேந்திரபுரத்தில் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பேரணியும், பொதுக் கூட்டமும் நடைப்பெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் பங்கேற்றன. மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... 'இந்த போராட்டம் வட இந்தியாவில் முன்னெடுக்கப்படுவது போல, பல இன மக்களும் பங்கேற்கும் களமாக விரிவுப்படுத்தப்பட வேண்டும். டெல்லியில் நடைபெறும் ஷாகின் பாக் போராட்ட களம் அவ்வாறு தான் நடக்கிறது. பல இன மக்களும் பங்கேற்பதால், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்ற பிறகும் மக்கள் எழுச்சியை நிலைகுலைய செய்ய முடியவில்லை. அதனால் தான் குறுக்கு வழியில் சங்பரிவார் ஆதரவு கூலிப்படையை வைத்து டெல்லியில் திட்டமிட்ட வன்முறையை நடத்தி உள்ளார்கள். கூலிப்படை வன்முறை கும்பல் பள்ளிவாசல்களைத் தாக்கியது. ஆனால், அன்று இரவு அங்குள்ள கோயிலை முஸ்லிம்கள் பாதுகாத்து இந்துக்களிடம் ஒப்படைத்துள்ளனர் . அது போல, அங்கு கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை பல இடங்களில் இந்துக்கள் அரண் அமைத்து பாதுகாத்துள்ளனர். துயரத்திலும், இவ்விரு சம்பவங்கள் நெகிழ்ச்சியை தருகின்றன. இது தான் உண்மையான இந்தியா என்பதை ஃபாஸிஸ்ட்டுகள் உணர வேண்டும். குடியுரிமை கறுப்பு சட்டங்களால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆபத்து இருக்கிறது. அஸ்ஸாமில்