சென்னை.பிப்.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இன்று மதியம் நியூஸ்18 சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது... * நான் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில்தான் தங்கியுள்ளேன். * தமிழக அரசியலில் மத்திய அரசு குழப்பம் செய்கிறது. * அதிமுகவை பிளக்க பாஜக முயற்ச்சிக்கிறது. *அதிமுகவின் இருதரப்பும் உட்கார்ந்து பேச வேண்டும். *அதிமுக பிளவுப்படக் கூடாது. * கவர்னர் விரைவில் முடிவெடுக்க வேண்டும். என பேட்டியளித்தார்... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி ( MJK IT-WING) சென்னை. 11.02.2017
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மஜக தலைமையகத்தில் செங்கோட்டையன்…
சென்னை,பிப்.11.,மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நேற்று இரவு 9 மணி வரை தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய அவைத்தலைவர் செங்கோட்டையன் அவர்கள் மஜக தலைமையகத்திற்கு இரவு 10 மணியளவில் வருகை தந்து, தங்களது அரசியல் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். மனிதநேய ஜனநாய கட்சியின் ஆதரவு தங்களுக்கு தேவை என்றும் கோரினார். தற்போதைய மஜகவின் நிலைப்பாடு குறித்து அறிக்கை நகல் அவருக்கு வழங்கப்பட்டது அவரது வேண்டுகோள் குறித்து தலைமை நிர்வாகம் கவனத்தில் கொள்ளும் என்றும் கூறப்பட்டது. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தலைமையகம்,சென்னை 11.02.17
மஜக திருவல்லிக்கேணி சேப்பாக்கம் பகுதி ஆலோசனைம் கூட்டம்…
சென்னை.பிப்.10., *மத்திய சென்னை மாவட்டம்* திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதி *மனிதநேய ஜனநாயக கட்சி*யின் ஆலோசனை கூட்டம் 09/02/2017 மாலை இஷா தொழுகைக்கு பிறகு *மாவட்ட செயலாளர்* A.முஹம்மது ஹாலித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு *மாவட்ட பொருளாளர்* M.Y.பிஸ்முல்லாகான், *மாநில செயற்குழு உறுப்பினர்* M.R.அன்வர் தீன், மாவட்ட துணை செயலாளர் M.H.பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்கள். இந்த கூட்டத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியின் பொருப்புக்குழு கலைக்கப்பட்டு *புதிய பகுதி நிர்வாகிகள்* ஏகமனதாக *தேர்வு* செய்யப்பட்டனர். *பகுதி செயலாளர்* P.M. பஷீர் அஹமது B.sc., *பகுதி பொருளாளர்* R.அசன் *பகுதி துணை செயலாளர்கள்* 1) A. சலீம் அலி 2) முஹம்மது சல்மான் 3) இஷாக் மேற்கண்ட புதிய நிர்வாகத்திற்கு மாநில தலைமை அங்கீகாரம் வழங்க *மாவட்ட செயலாளர்* வாயிலாக உரிய முறையில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) மத்திய சென்னை. 09.02.2017
சிறைவாசிகள் மீதான தொடரும் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு!
பிப்.09., கடலூர் மத்திய சிறையில் தொடரும் சிறைவாசிகளின் மீதான வன்முறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 07-02-2017 அன்று காலை கடலூரில் நடைபெற்றது. இதில் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுச்சேரி மனித உரிமைகள் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைக்கழக பேச்சாளார் கடலூார் S.மன்சூர், மஜக மாவட்ட செயலாளர் நெய்வேலி N.இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் நெய்வேலி P. ஷாஜகான் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மஜக மாவட்ட மீனவர் அணி செயலாளர் யூசப், நெல்லிக்குப்பம் மஜக நகர செயலாளர் அப்துல் பாஸித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING கடலூர் மாவட்டம் 08-02-2017
சற்று முன் மஜக புதிய தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளுடன் பொது செயலாளர்!
பிப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தில் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அழைத்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். உடன் பொருளாளர் S.S.ஹாருன் ரசிது, தலைமை ஒருங்கினைப்பாளர் மெளலா நாசர், மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் மற்றும் துறைமுகம் பகுதி நிர்வாகிகள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING) மத்திய சென்னை மாவட்டம். 09.02.17