தென்காசி.ஏப்.24., கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் குறித்த விழிப்பணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நகரச் செயலாளர் சுல்தான், நகரப் பொருளாளர் இத்ரீஸ், நகர இளைஞர் அணி செயலாளர் தர்வீஸ் மைதீன், நகர வர்த்தக அணி செயலாளர் ராஜா முஹம்மது, நகர நிர்வாகிகள் மற்றும் மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் அ.பீர் மைதீன் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் #24.04.2020
Tag: கொரோனாவைரஸ்
கைதிகள் நோன்பு வைக்க உரிய வசதிகளை செய்துதருக, அமைச்சர் CVசண்முகத்திடம் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!
ஏப்ரல் 23, தமிழக சிறைகளில் புனித ரமலான் மாதத்தில், நோன்புகளை பின்பற்றும் கைதிகளுக்கு வருடந்தோறும் சிறைத்துறை சார்பில் உரிய வசதிகள் சட்டப்படி செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாண்டு கூடுதலாக, விசா குழப்பத்தில் கைதான வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தார்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நோன்பு தொடங்குவதற்கான அதிகாலை சஹர் உணவு, மாலையில் நோன்பை நிறைவு செய்ய இஃப்தார் உணவு ஆகியவை தடங்களின்றி கிடைக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இன்று மாலை சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.சி.வி.சண்முகம் அவர்களிடம் அலைப்பேசியில் வலியுறுத்தினார். வருடந்தோறும் சட்டப்படி வழங்கும் ரமலான் மாத உணவு முறைகள் அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் அவரிடம் உறுதியளித்தார். இதர விஷயங்களில் அனைத்து கைதிகளுக்குமான கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தலைமையகம்.
கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் கோவை மாவட்ட மஜகவினர்!!
கோவை:ஏப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து 6ஆம் கட்டமாக வெள்ளளூர் ஹவுசிங் போர்டு, குனியமுத்தூர், உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தினர். மஜக வினரின் இப்பணியை கோவில் நிர்வாகிகள்,குடியிருப்பு வாசிகள், பெரிதும் பாராட்டினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 06.04.2020 https://m.facebook.com/story.php?story_fbid=2376641699102258&id=700424783390633