பேராவூரணி கிளை நிர்வாகிகள் கூட்டம் !

image

image

image

தஞ்சை.நவ.05., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த சில தினங்கள் முன்பு துவங்கப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை நிர்வாகிகள் கூட்டம் 04-11-2017 நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.ஏ. சலாம் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடத்துவது என்றும்,

அந்நிகழ்விற்கு பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்களையும், துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் ஒருங்கிணைப்பாளர் சலாம் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
04-11-2017