காட்பாடி T.K.புரம் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

image

image

image

image

வேலூர்.அக்.22, வேலூர் கிழக்கு மாவட்டம் காட்பாடி ஒன்றியம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) T.K.புரம் ஊராட்சி கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி பள்ளி அருகில் காலை 8.30 மணியளவில் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் வசீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மஜக வேலூர் மாநகர முன்னால் துணை செயலாளர் இம்தியாஸ், T.K.புரம் கிளை செயலாளர் முனீர், கிளை பொருளாளர் இக்பால், துணை செயலாளர்கள் அப்ரோஸ், மஹபூப், 15வது வார்டு கிளை செயலாளர் முஹம்மத் ஆசிப், கிளை துணை செயலாளர் நவாஸ், 53 வது வார்டு கிளை செயலாளர் ஜியாவுத்தின் கலீம், முன்னா, சாதிக், அல்லாபகஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பெரியோர்கள், சிறுவர்கள் என பொதுமக்கள் சுமார் 500 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
22.10.2017