சென்னை பெரம்பூர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

image

image

image

சென்னை.அக்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதி முத்தமிழ் நகரின் சார்பாக இன்று (22/10/2017) காலை 11.00 மணியளவில்  டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாபெரும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் புது மடம் அனிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தனர்.

இம்முகாமில் பெரம்பூர் பகுதி செயலாளர் அக்பர், பகுதி பொருளாளர் அப்துல் ரஷித் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தினை வழங்கினர்.

பொதுமக்கள் நிலவேம்பு கசாயம்  அறுந்தியும், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வாங்கிச்சென்றும் பயன்பெற்றனர்.

மஜகவின் இந்த மனிதநேய பணிகளை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வட_சென்னை_மாவட்டம்