குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம்..!

image

image

image

குவைத்.அக்.14., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம் நேற்று 13/10/2017 வெள்ளிக்கிழமை மாலை 7 மணியாளவில் திருச்சி உணவகம் முர்காப்பில் மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக மண்டல IKP செயளாலர் சகோ.இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க. மண்டல ஊடக பிரிவு செயளாலர் சகோ.அதிரை அப்துல் சமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் தாயகத்தின் அரசியல் சூழல் மற்றும் மண்டல செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்ட நிகழ்வுகள் குறித்து விரிவாக விளக்கிய பின் மண்டல பொருளாளர் சகோ. நீடூர் நபீஸ் அவர்கள் பொருளாதாரம் குறித்து விளக்கினார்.

இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகிகளும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

தீர்மானங்கள்:

1) எதிர் வரும் டிசம்பர் மாதம் நிகழ்ச்சி நடத்துவது.

2) இரத்த தானம் முகாம் நடத்துவது.

3)மூன்றாவது மண்டல மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான முடிவை அறிவிப்பது.

4) மாதாந்திர மண்டல கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக மண்டல மருத்துவ அணி செயளாலர் சகோ. மாயவரம் சபீர் அவர்கள் நன்றியுரை கூறினார்.

தகவல்:
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJK IT-WING
#குவைத்_மண்டலம்.

55278478 – 60338005 – 65510446.