71-வது இந்திய சுதந்திர தினவிழா! மஜக வாழ்த்து..!!

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)

இந்திய துணைக்கண்டம் என புகழப்படும் இந்திய நாட்டின் 71 – வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

சிராஜ் உத்தௌலா , ஜான்ஸிராணி லெட்சுமிபாய் , பகதூர்ஷா , பூலித்தேவன் , தீரன் சின்னமலை , தீரன் திப்புசுல்தான் , குயிலி , வீரன் அழகுமுத்துக்கோன் , கட்டபொம்மன் , காந்தியடிகள் , நேரு , நேதாஜி , அபுல்கலாம் ஆசாத்  என பல்வேறு கட்டங்களில் பல்வேறு வடிவங்களில் நமது முன்னோர்கள் இந்திய விடுதலைக்காக போராடி தியாகங்களை புரிந்தனர்.

இன்று நமது சுதந்திரத்தை பாதுகாக்கும் பெரும் பணி நம் முன்னே காத்துக்கிடக்கிறது.

மதவெறி, சாதிவெறி , பயங்கரவாதம் , ஊழல் , கனிமவள சுரண்டல் , விவசாய நிலங்களை இழத்தல் , நீராதாரங்கள் ஆக்கிரமிப்பு என பெரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராட வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.

அந்த எண்ணங்களோடு , அமைதியான தாயகத்தை கட்டமைக்க அனைவரும் உறுதியேற்போம் எனக்கூறி , மீண்டும் எமது சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
14.08.2017